கோடைவெயிலிலும் சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்வது எப்படி..?

By ezhil mozhiFirst Published Mar 26, 2020, 6:36 PM IST
Highlights

காலையில் எழுந்து காபி டீ குடிப்பதற்கு பதிலாக தினமும் சிறிய டம்ளர் அளவு தக்காளி ஜூஸ் அருந்தி வாருங்கள் மக்களே.. அப்புறம் வித்தியாசத்தை பாருங்க....

கோடைவெயிலிலும் சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்வது எப்படி..?

நாம் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்குத்தான் இருக்காது. சொல்லுங்க.... எப்போதுமே மற்ற எந்த பிரச்சனை இருந்தாலும் நம் உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும் அல்லவா..? அதிலும் குறிப்பாக, கோடை காலத்தில் நம் உடல் ஆரோக்கியத்தையும், நம்  சருமத்தையும் பேணி காக்க நல்ல உணவு பொருட்களையும், பழங்களையும் எடுத்துக்கொள்வது நல்லது 

நம் முகத்தினை எப்போதும் பளபளப்பாக வைத்துக்கொள்ள தினமும் கீழ்குறிப்பிட்டு உள்ள ஜூஸ் வகைகளை அருந்தலாம். 

அதன் படி, 

கேரட் ஜூஸ்

வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால், சருமத்தை நல்ல ஆரோக்கியமாக கரும் புள்ளிகள் இல்லாமல், சருமத்தை சீராக வைத்துக்கொள்ளும்...ரத்த செல்களுக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுத்து சருமம் மினுமினுக்க செய்யும்.

தக்காளி ஜூஸ்

காலையில் எழுந்து காபி டீ குடிப்பதற்கு பதிலாக தினமும் சிறிய டம்ளர் அளவு தக்காளி ஜூஸ் அருந்தி வாருங்கள் மக்களே.. அப்புறம் வித்தியாசத்தை பாருங்க....

லெமன் ஜூஸ் 

சருமத்திற்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான ஜூஸ் என்றால் அது லெமன் ஜூஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, 

ஆரஞ்சு  ஜூஸ் 

வெள்ளரி ஜூஸ்

ஸ்வீட் லைம் ஜூஸ்

மாதுளை ஜூஸ் 

ஆப்பிள் ஜூஸ் 

திராட்சை ஜூஸ் 

பீட்ரூட் ஜூஸ்

பப்பாளி ஜூஸ் உருளைகிழங்கு மற்றும் இஞ்சி கலந்த ஜூஸ். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஜூஸ் வகைகளை குறித்து வைத்துக்கொண்டு சரியான நேர இடைவெளியில் எடுத்துக்கொண்டால் நம் சருமம் நன்றாக இருக்கும். 

click me!