
ப்ரீ ஒய்-பை சேவையில் ஆபாச வீடியோ.......”குதூகலத்தில் பாட்னா”
பீகார் மாநிலத்தில் முதல் ஒய் பை சேவையை பெரும் ரயில் நிலையம் பாட்னா.
அதாவது இந்தியா முழுவதும், இதுவரை 23 ரயில் நிலையங்களில் , ப்ரீ ஒய் பை சர்வீஸ்,ரெயில்டெல் மூலமா வழங்கப்பட்டு , தற்போது நடைமுறையில் உள்ளது.
இதில், இன்டர்நெட் சேவையை பயன்படுத்த அதிகம் தேடும் ரயில் நிலையங்களில் பெங்களூரு, நியூ டெல்லியை அடுத்து , ஜெய்பூர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது .
ஆனால், தற்போது, ப்ரீ ஒய் பை சேவையை பயன்படுத்தி, பார்ன் வீடியோ ,அதாவது ஆபாச வீடியோக்களை அதிகளவில் பதிவிறக்கம் செய்யும் ரயில் நிலையமாக ,பீகார் மாநிலத்தின், பாட்னா ரயில் நிலையம் இடம் பெற்றுள்ளது.
பாட்னா ரயில் நிலையத்தை பொறுத்தவரை , ஒரு நாளைக்கு சுமார் 200 ரயில்கள் அவ்வழியாக செய்கிறது.இந்த ரயில் நிலையத்தில், ரயில்கள் நிற்கும் போது, மக்கள் அதிகளவில், ப்ரீ ஒய்பை சேவையை பயன்படுத்துகின்றனர். இந்த சேவையை பயன்படுத்தி ,குறிப்பாக பார்ன் வீடியோ , பதிவிறக்கம் செய்வது அதிகளவில் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
ஒரு சிலர் பாலிவுட். கோலிவுட் பில்ம்ஸ் டவுன்லோட் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட்னா ரயில் நிலையத்திற்கு கடந்த மாதம் தான் ப்ரீ ஒய் பை சேவை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குள்,......இத்தனை அதிவேக வளர்ச்சியில் பாட்னா...........!!!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.