கைரேகை ஸ்கேன்...! சத்தமில்லாமல் சாகசத்தில் இறங்கும் சாம்சங்...!

 
Published : Dec 03, 2017, 05:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
கைரேகை ஸ்கேன்...! சத்தமில்லாமல் சாகசத்தில் இறங்கும் சாம்சங்...!

சுருக்கம்

Fingerprint scan on the smartphone - Samsung company

கைரேகை முறையில் பாதுகாப்பு அமைப்பினை உருவாக்கும் முயற்சியில் சாம்சங் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

புதிய முயற்சிகளை மேற்கொண்டு பயனாளர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சித்து வருகிறது சாம்சங் நிறுவனம். அந்த வகையில், 12 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட் பேட்டரிகளைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் முயற்சித்து வருகிறது. இந்த புதுமையான பேட்டரிகளைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் பட்சத்தில், இதனை வாங்க பலர் ஆதுர்வம் செலுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. 

அதன் தொடர்ச்சியாக புதிய முறையில் செக்யூரிட்டி வசதிகளை வழங்கவும் சாம்சங் நிறுவனம் முயற்சி செய்து வருவதாக தெரிகிறது. தற்போது பேசியல் ஸ்கேன், பிங்கர் பிரிண்ட் ஸ்கேன், ஐரிஸ் ஸ்கேன், பேட்டன் மற்றும் பாஸ்வேர்ட் என பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

அதனுடன் பயனாளர்களின் உள்ளங்கையில் உள்ள கைரேகையின் பின்புற கேமரா மூலம் ஸ்கேன் செய்து அதனையும் பாஸ்வேர்டாக பயன்படுத்த அந்நிறுவனம் முயற்சித்து வருகிறது. இந்த வசதியானது மற்ற பாதுகாப்பு சிறப்பம்சங்களைப்போல் அன்லாக் செய்ய உதவுவதல்ல.

இந்த வசதியைப் பயன்படுத்தி கைரேகையை ஸ்கேன் செய்தால் பயனாளர்களுக்கு பாஸ்வேர்ட் ஹின்ட் வழங்கப்படும் என்றும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது பயனாளர்கள், தங்களின் பாஸ்வேட்டுகளை மறந்த பின்னர், அதனைக் கண்டறிய ஹிண்ட் என்ற வசதியைப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்று. அதனை வெளிப்படையாக காண்பிக்காமல் இந்த வசதியின் மூலம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

பயனாளர்களின் கைரேகை ஸ்கேன் செய்த பிறகே இந்த ஹிண்ட் வெளிப்படையாகத் தெரியவரும் என்றும், இந்த வசதி சாம்சங் நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக உள்ள ப்ரீமியம் மாடல்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த விஷயங்கள் எப்போதும் திருப்தியே தராது- சாணக்கியர்
படுக்கையறையில் 'சிலந்தி செடி' வைங்க;நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்கும்