அத்திப்பழத்தை ஊரவச்ச தண்ணீர்.. அதை குடித்தால் எத்தனை நன்மைகள் இருக்கு தெரியுமா? கேட்டா அசந்துபோவீங்க!

Ansgar R |  
Published : Oct 14, 2023, 12:04 AM IST
அத்திப்பழத்தை ஊரவச்ச தண்ணீர்.. அதை குடித்தால் எத்தனை நன்மைகள் இருக்கு தெரியுமா? கேட்டா அசந்துபோவீங்க!

சுருக்கம்

காலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத் தண்ணீரைக் குடிப்பது நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், அது உடல் எடையைக் குறைக்க உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள். சரி இன்னும் என்னவெல்லாம் நன்மைகள் அதில் உள்ளது? 

உலர் பழங்கள் இந்தியர்களின் விருப்பமான சிற்றுண்டி என்றால் அது மிகையல்ல. இந்த உலர் பழங்கள் சுவையானது மட்டுமின்றி சத்தானதும் கூட. திராட்சை, பேரிச்சம்பழம் முதல் பெர்ரி பழங்கள் வரை ஏராளமான உலர் பழங்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவை அனைத்திலும் அத்திப்பழம் மிகவும் ஆரோக்கியமானது. 

இதன் சுவையும், அதில் உள்ள சத்துக்களும் அதிக நன்மை பயக்கும். இந்த அத்திப்பழங்களை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பின்வருமாறு பார்ப்போம்.

உங்கள் உறவில் ரொமான்ஸை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும் டிப்ஸ்.. தம்பதிகளே ப்ளீஸ் நோட்..

எடை குறைக்க உதவுகிறது

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு, அத்திப்பழம் பெரிய அளவில் உதவும். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நீங்கள் குறைந்த அளவு கலோரிகளை உட்கொள்ள அத்திப்பழங்கள் உதவுகிறது, காரணம் இது பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத் தண்ணீரைக் குடிப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

செரிமானத்திற்கு நல்லது

நீங்கள் செரிமான பிரச்சனைகளால் அவதிப்பட்டால், அத்திப்பழம் நீர் செரிமானத்தை மேம்படுத்த உதவும். இது இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது என்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும். இது நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும், இது குடல் இயக்கத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. அத்திப்பழத்தை உட்கொள்வதால் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். 

இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது

அத்தி நீர் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பதைத் தடுக்க உடலில் சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதும் நல்லது.

என்னங்க சொல்றீங்க! ஊறவைத்த பேரீச்சம்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்