"ஏர்போர்ட் மாதிரி பஸ்போர்ட்"..! பட்டைய கிளப்பும் எடப்பாடி...!

By ezhil mozhiFirst Published Aug 20, 2019, 7:27 PM IST
Highlights

சேலம் மாவட்டம், நங்கவள்ளியில், முதலமைச்சரின் சிறப்பு குறை தீர் திட்டத்தை  எடப்பாடி பழனிசாம் தொடங்கி வைத்து  நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். 

"ஏர்போர்ட் மாதிரி பஸ்போர்ட்"..! பட்டைய கிளப்பும் எடப்பாடி...! 

சேலம் அரபிக் கல்லூரி அருகே 1500 கோடி செலவில்  66 ஏக்கரில் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய பஸ்போர்ட் விரைவில் அமைக்கப்படும் எனவும்  முதலவர் எடப்பாடி அறிவித்து உள்ளதால் சேலம் மக்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். 

சேலம் மாவட்டம், நங்கவள்ளியில், முதலமைச்சரின் சிறப்பு குறை தீர் திட்டத்தை  எடப்பாடி பழனிசாம் தொடங்கி வைத்து  நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். 

அப்போது, கர்ப்புறங்கள் மற்றும் கிராமங்கள்தோறும் அரசு அதிகாரிகள் நேரடியாக சென்று, மனுக்களை பெற்று, மக்களின் குறைகளுக்கு தீர்வு காண, முதலமைச்சரின்  சிறப்பு குறைதீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அனைத்து நகர்ப்புற வார்டுகளிலும், கிராமங்களிலும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி,  குறிப்பிட்ட நாளில் அலுவலர் குழு, ஆகஸ்ட் மாத இறுதிக்குள், மனுக்களை பெறுவார்கள் என்றும், இம்மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு, ஒரு வாரத்திற்குள் அனுப்பப்படும். 

அம்மனுக்கள் மீது, ஒரு மாதத்திற்குள் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைக்கு பின், செப்டம்பர் மாதம், அமைச்சர்கள் தலைமையில், தாலுகா அளவிலான விழா நடத்தப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

வீட்டுமனை இல்லாத அனைத்து ஏழை மக்களுக்கும், வீட்டு மனை வழங்குவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்கும். முதியோர் உதவித்தொகை திட்டத்தில், மேலும், 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, சேலம் அரபிக் கல்லூரி அருகே 1500 கோடி செலவில்  66 ஏக்கரில் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய பஸ்போர்ட் விரைவில் அமைக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி அறிவித்து உள்ளதால் சேலம் மக்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனை சிக்கல் வந்தாலும், ஆட்சியை கவிழ்க்க திமுக போராடி வந்தாலும், உட்கட்சி பூசல்  தலை விரித்தாடிய போதும் அனைத்தையும் கடந்து தொடர்ந்து முதல்வராக நீடிக்கும் எடப்பாடி பழனிசாமி மக்களுக்காக பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வியப்பில் ஆழ்த்துகிறார்.  

click me!