இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி கடப்பா கார சட்னி செஞ்சு சாப்பிடுங்க.. அல்டிமேட்டா இருக்கும்!

By Kalai SelviFirst Published Sep 27, 2024, 6:00 AM IST
Highlights

Kadappa Kara Chutney Recipe : சுவையான கடப்பா கார சட்னி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்று காலையில் இட்லி அல்லது தோசைக்கு செய்ய போறீங்களா? அதற்கு சைடு டிஷ் ஆக சற்று வித்தியாசமான சுவையில் சட்னி ஏதாவது செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான். உங்களுக்கு கார சட்னி பிடிக்குமா? அப்படியானால் கடப்பா கார சட்னி செய்து சாப்பிடுங்கள். 

இந்த கடப்பார சட்னி சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். அதுமட்டுமின்றி இந்த சட்னி செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. மிகவும் சுலபமான முறையில் செய்து முடித்து விடலாம். ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த கடப்பா கார சட்னி செய்து கொடுங்கள். எக்ஸ்ட்ரா ரெண்டு இட்லி சாப்பிடுவார்கள். இதுவரை இந்த சட்டினியை நீங்கள் சாப்பிடவில்லை என்றால் கண்டிப்பாக செய்து சாப்பிடுங்கள். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் கடப்ப கார சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

Latest Videos

இதையும் படிங்க:  முள்ளங்கி சட்னி சாப்பிட்டு இருக்கீங்களா? ரெசிபி இதோ!

கடப்பா கார சட்னி செய்ய தேவையான பொருட்கள் :

பூண்டு - 5 
வரமிளகாய் - 5
புளி - 1 சிறிதளவு 
சின்ன வெங்காயம் - 12
கடுகு - 1/2 ஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்  
பெரிய தக்காளி - 1 (அரைத்தது)
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

இதையும் படிங்க:  மூட்டு வலிக்கு சத்தான பிரண்டை சட்னி.. எப்படி செய்யணும் தெரியுமா?

செய்முறை:

கடப்பா கார சட்னி செய்ய முதலில், மிக்சர் ஜாரில் பூண்டு, வரமிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து சற்று கொரகொரவென்று அரைக்கவும். அதன் பின் அதில் சின்ன வெங்காயத்தை போட்டு 
நன்கு மென்மையாக அரைத்து தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். 

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் மிக்ஸி ஜாரில் தக்காளியை போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தின் பச்சை வாசனை போன பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு கிளறவும். இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். பிறகு சட்னியில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சுமார் 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் கடப்ப கார சட்னி ரெடி. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!