டாக்டர்ஸ், நர்ஸ்களுக்கு கொரோனா தொற்றியதால் ஓர் மருத்துவமனையே "தனிமை"..!

thenmozhi g   | Asianet News
Published : Apr 06, 2020, 07:56 PM IST
டாக்டர்ஸ், நர்ஸ்களுக்கு கொரோனா தொற்றியதால் ஓர் மருத்துவமனையே "தனிமை"..!

சுருக்கம்

மும்பை வாக்ஹார்ட் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 26 நர்சுகள் மற்றும் 3 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

டாக்டர்ஸ், நர்ஸ்களுக்கு கொரோனா தொற்றியதால் ஓர் மருத்துவமனையே "தனிமை"..!

மும்பையில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு  கொரோனா தோற்று ஏற்பட்டு உள்ளதால் அந்த மருத்துவமனையை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது 

இந்தியா முழுக்க தற்போது 4000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  நாளுக்கு நாள் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது கொரோனா. இந்த நிலையில் மகாராஷ்டிரா மற்றும்   தமிழகத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது இந்த நிலையில் மும்பையில் உள்ளது வாக்ஹார்ட் மருத்துவமனையில் பணியாற்றி வரும் நர்சுகள் மற்றும் டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது 

இந்தியாவில் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிக அளவில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு நிலையில் நோயாளிகளை அனுமதிக்க பெட் இல்லை என்பதால்  தற்காலிக மருத்துவமனைகள் ஏற்படுத்துகின்றனர்.  

இந்நிலையில், மும்பை வாக்ஹார்ட் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 26 நர்சுகள் மற்றும் 3 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை டெஸ்ட் செய்த பின்னர் தான் உள்ளே அனுமதிக்கப் படுகின்றனர். அதே போன்று மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும் தொடர்ச்சியாக இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே வெளியில்  அனுமதிக்கப்படுகின்றனர்.

கொரோனா பாதித்தவர்களை தான் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றால், தற்போது சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் நர்ஸ்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஓர்  மருத்துவமனையே   தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்