மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக , ஒரே முகத்தில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உருவாக்கி, இளைஞர் ஒருவர், அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், கடந்த 5 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு காலமானார்.
அவரது உடல் , சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள , எம் ஜிஆர் நினைவிடத்திற்கு அருகே , நல்லடக்கம் செய்யப்பட்டது .
அதனை தொடர்ந்து, பலதரப்பினரும் , பொதுமக்களும் ஜெயலலிதா அவர்களுக்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .
தற்போது , மெழுகு வர்த்தியை பயன்படுத்தி வித்தியாசமான முறையில் கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் , அம்மாவிற்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.