கருமையான, அடர்த்தியான கூந்தல் வேண்டுமா..? முடி உதிர்வு பிரச்சனையா..? விளக்கெண்ணெயில் இருக்கும் 5 மகத்துவம்!

Anija Kannan   | Asianet News
Published : Feb 18, 2022, 08:49 AM IST
கருமையான, அடர்த்தியான கூந்தல் வேண்டுமா..? முடி உதிர்வு பிரச்சனையா..? விளக்கெண்ணெயில் இருக்கும் 5 மகத்துவம்!

சுருக்கம்

விளக்கெண்ணெயில் இருக்கும் 5 மகத்துவத்தை பின்பற்றி, கூந்தலை ஆரோக்கியமாகவும், முடி உதிர்வு பிரச்சனையில் இருந்து பாதுகாப்பாகவும் வைத்து கொள்ளுங்கள்.

விளக்கெண்ணெயில் இருக்கும் 5 மகத்துவத்தை பின்பற்றி, கூந்தலை ஆரோக்கியமாகவும், முடி உதிர்வு பிரச்சனையில் இருந்து பாதுகாப்பாகவும் வைத்து கொள்ளுங்கள்.

இயற்கை நமக்கு தந்த அற்புதங்களில் ஒன்று, முடி வளர்வது. குறிப்பாக, பெண்களுக்கு முடி என்பது அழகின் முதல் குறிப்பிடத்தக்க பகுதியாகும். இது உங்கள் தோற்றத்தில் செல்வாக்கு செலுத்தும் அளவிற்கு ஒருவரின் ஆளுமையை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் முழு தோற்றத்திற்கும் அழகை சேர்க்கிறது. 

முடி ஆரோக்கியத்தில் மரபியல் முக்கியப்பங்கு வகிக்கிறது, இதுமட்டுமின்றி உங்கள் உணவுமுறை, வானிலை, மாசுபாடு மற்றும் முடி பராமரிப்புக்கான உங்கள் ஒட்டுமொத்த அணுகுமுறை ஆகியவற்றையும் பொறுத்தது. முகத்தின் பராமரிப்பை தீவிரமாக செய்யும்போது நம்மில் பெரும்பாலோர் துரதிர்ஷ்டவசமாக நமது உச்சந்தலையின் ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும் கவனிக்காமல் விடுகிறோம். 

உங்கள் தலைமுடி ஈரப்பதமாகவும், நீரேற்றமாகவும் இருந்தால், அது பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் இருக்கும். எனவே, விளக்கெண்ணெயின் நன்மைகளை தெரிந்துக்கொண்டு, உங்கள் கூந்தலை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்து கொள்ளுங்கள்.

பொதுவாக தலைமுடிக்கு விளக்கெண்ணெயை யாரும் பயன்படுத்துவதில்லை, ஆனால் கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இந்த எண்ணெயில் உள்ளன.

விளக்கெண்ணெயின் நன்மைகள்:

இது முடியின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கும் விளக்கெண்ணெய் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளைக் கொண்டுள்ளது.சேதமடைந்த முடியை சரியாக்கி பொடுகை நீக்கும் தன்மை கொண்டது.

ஆமணக்கு எண்ணெயில் உள்ள ரிசினோலிக் அமிலம்,உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது, இது விரைவான முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. முடி வளராதவர்கள், முடி வறண்டு கணப்படுபவர்கள் மற்றும் இளநரை அதிகம் கொண்டவர்கள் விளக்கெண்ணெயை பயன்படுத்தி நன்மை பெறலாம். 

பளபளக்கும் கூந்தல்:

விளக்கெண்ணெய் முடிக்கு பொலிவைத் தருகிறது. தலைச்சாயம் அதிகமாக பயன்படுத்துவதும், பல்வேறு ரசாயனங்களை கூந்தலில் போடுவதாலும், முடியின் பளபளப்பு மறைந்துவிடும்.

முடியை நீளமாக்கும்:

விளக்கெண்ணெயை தொடர்ந்து மசாஜ் செய்வதால் முடி வேகமாக வளருவதோடு வலுவடையும். முடி வளர்ச்சிக்கு, தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் சில துளிகள் ஆமணக்கு எண்ணெயைக் கலந்து உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்.

முடியை மென்மையாகவும் மிருதுவாகவும் ஆக்குகிறது:

விளக்கெண்ணை என்னும் ஆமணக்கு எண்ணெய் ஒரு சிறந்த கண்டிஷனர். கற்றாழை ஜெல், எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து முடியின் வேர்களில் தடவி ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். சிறிது நேரம் கழித்து முடியைக் கழுவவும். இது முடியை வலுவாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது.

முடியை வலுவாக்கும்:

ஆமணக்கு எண்ணெய் முடியை பலப்படுத்துகிறது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. அதனால், முடி உதிர்தல் பிரச்சனை நீங்கி, முடி வேகமாக வளரும்.

தேங்காய் எண்ணெயுடன் கலந்து விளக்கெண்ணெயை பயன்படுத்தலாம். இந்த கலவை எண்ணெயை ஒன்று தலையில் தேய்த்து இரண்டு மணி நேரம் வரை தலைமுடியில் ஊற விடவும், அதன் பிறகு தலையை கழுவவும்.

மேலும், கூந்தலில் சரியான பராமரிப்பு தேவை:

உச்சந்தலையில் மட்டுமே கவனம் செலுத்த முதல் ஷாம்பூவைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது, உங்கள் தலைமுடியைக் கழுவுவதற்கு முன் 2 முதல் 3 நிமிடங்கள் உங்கள் உச்சந்தலையைச் சுத்தம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இதேபோல், நம்மில் பலர் செய்யும் ஒரு பொதுவான தவறு, கண்டிஷனர் மூலம் உச்சந்தலையை சுத்தப்படுத்துவது. 


 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்
மனைவியைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாதவை - சாணக்கியர்