பச்சிளம் குழந்தைக்கு சூடு போட்ட நர்ஸ் ....!!! லஞ்சம் தர மறுத்ததால் விளைந்த விபரீதம் ..!!!
ஜெய்பூரில், மாயா என்ற பெண் பிரசவத்திற்காக, அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், பிரசவம் பார்த்த அந்த நர்ஸ், லஞ்சமாக 3௦௦ ரூபாய் கேட்டுள்ளதாக தெரிகிறது.
தொடர்ந்து, லஞ்சம் தர மறுத்ததால் கோபமடைந்த நர்ஸ் , குழந்தையை ஹீட்டருக்கு அருகில் கொண்டு சென்றதாக தெரிகிறது. இதனால் குழந்தையின் உடலில் சூடு காயம் ஏற்பட்டுள்ளது .
பின்னர் , பயந்துப்போன அந்த தாய், அந்த செவிலிக்கு 300 ரூபாயும் , மற்றொரு செவிலிக்கு 200 ரூபாயும் கொடுத்துள்ளனர்.
இது குறித்து , காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக , நான்கு மருத்துவர்கள் அடங்கிய குழு, மாநில சுகாதார அமைச்சகத்துக்கு , வரும் 26 ஆம் தேதிக்குள் அறிக்கை வழங்க வேண்டுமென உத்திரவிடப்பட்டுள்ளது.