ஜல்லிகட்டுக்கும்   “ஆதார் கார்டு “....!!! முன்பதிவு மும்முரம்...!! களமிறங்கும் காளைகள் ..!!

Asianet News Tamil  
Published : Feb 03, 2017, 02:13 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
ஜல்லிகட்டுக்கும்   “ஆதார் கார்டு “....!!! முன்பதிவு மும்முரம்...!! களமிறங்கும் காளைகள் ..!!

சுருக்கம்

ஜல்லிகட்டுக்கும்  “ஆதார் கார்டு “....!! முன்பதிவு மும்முரம்...!! களமிறங்கும் காளைகள் ..!!

பல கட்ட  போராட்டத்திற்கு  பின் ,  தமிழ்நாட்டில்   ஜல்லிக்கட்டு  நடைபெற உள்ளது.  அதற்கான பல  முன்னேற்பாடுகள்  தற்போது நடைபெற்று வருகிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு :

அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடக்கிறது. காளைகளை பரிசோதனை செய்து உடல் தகுதிச் சான்று வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. கால்நடை பராமரிப்புத் துறையின் கட்டுப்பாட்டிலேயே ஜல்லிக்கட்டு நடக்கிறது என்பது  குறிபிடத்தக்கது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு  நடைபெறும் நேரம் ஏற்கனவே  அறிவிக்கப்பட்டு இருந்தது.    இருந்தாலும்,  சில  பல காரணங்களால், மீண்டும் ஜல்லிக்கட்டு நடை பெற்றும் தேதி மாற்றி அறிவிக்க பட்டுள்ளது.

வேலைப்பாடு  மும்முரம் :

ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான  அனைத்து  ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜல்லிக் கட்டில்  பங்கேற்க உள்ள காளைகளுக்கான  முன்பதிவு தொடங்கியுள்ளது.

ஆதார் கட்டாயம் :

ஜல்லிக்கட்டு  காளைகளை பதிவு செய்ய  விரும்புவோர்,  ஜல்லிக்கட்டு  காளையின் புகைப்படம் 2 ,உரிமையாளரின்  ஆதார்  கார்ட்  நகல்  2,  ஜல்லிக்கட்டு  காளை உரிமையாளரின்  போட்டோ  2  தேவை  என  தெரிவிக்கபட்டுள்ளது.

இதன்  மூலம் , ஆதாரின்  முக்கியத்துவம்  ஜல்லிக்கட்டின்  வாயிலாகவும் வெளிவருகிறது என்பது குறிபிடத்தக்கது.

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!