ஆசியன் பெயிண்ட்ஸ் சுவர் நன்கொடை பிரச்சாரம் !!

By ezhil mozhiFirst Published Aug 5, 2019, 1:00 PM IST
Highlights

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் வாழ்க்கைக் கதையை வெற்றுச்  சுவரில் எத்தனை முறை வரைவதற்கு நீங்கள் விரும்பினீர்கள்?

ஆசியன் பெயிண்ட்ஸ் சுவர் நன்கொடை பிரச்சாரம் !! 

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் வாழ்க்கைக் கதையை வெற்றுச் சுவரில் எத்தனை முறை வரைவதற்கு நீங்கள் விரும்பினீர்கள்?

உலகத்தில் நீங்கள் பார்க்கும் வாழ்க்கையை எத்தனை முறை அனுபவிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள்? ஒவ்வொரு முறையும் அனுபவிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் இல்லையா?

ஆசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் தனது முதல் முயற்சியாக செயின்ட் + ஆர்ட் இந்தியா அறக்கட்டளை இணைந்து உங்கள் எண்ணங்களை வண்ணப்பூச்சுகளாக வெளிப்படுத்த ஒரு மேடை அமைத்து தருகிறது.

இதற்காக ஆசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் சமீபத்தில் நன்கொடையாக சுவர் வழங்கும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. மக்கள் தங்கள் வீட்டு சுவர்களை கலைப்படைப்புகளுக்காகவும், சுவரோவியங்களுக்காக நன்கொடையாக கொடுக்க ஆசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் அழைக்கிறது.

சுவர் நேரம் என்ற இந்த ஆத்மார்த்தமான முயற்சி உலகை மாற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் வாழும் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் உண்டாகும் புதிய அலைகளை மாற்றுவதற்கு, கலையைப் பயன்படுத்துவதில் இந்த நிகழ்ச்சி முக்கிய கவனம் செலுத்துகிறது. 

இதன் மூலம் ஒரு புதிய சமூகத்தை உருவாக்க முடியும் என்பதே உண்மை. மேலும் இந்த வகையான முயற்சி, தற்போது மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பலவிதமான சுவர் ஓவியக் கலைகளை மீட்டெடுக்கும் நோக்கமாக உள்ளது. அவற்றில் சில கலைகள் சமூக ரீதியான கருப்பொருள்களுடன் தொடர்புடையதாக உள்ளது.

டெல்லி சுவர்களில் இந்த ஓவியம் வரைந்த பிறகு  சென்னை. கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் இந்த பிரச்சாரம் பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. அது  தற்போது அகமதாபாத்திற்கு செல்லும் வழியை உருவாக்கியுள்ளது. மாணவர்களது வாழ்க்கையில் ஒரு பெரிய விடியலை இந்த சுவர் ஓவியக் கதைகள் சாத்தியமாக்கியுள்ளது.

இந்த பிரச்சாரத்தில் பங்கேற்ற டாட் மண்டல பள்ளியின் நிறுவனர் மோனிகா வாஸ்வானி, அந்த பள்ளியை துடிப்பானதாகவும், நேர்மறையானதாகவும் மாற்றியுள்ளதாக தெரிவித்தார்.தங்கள் பள்ளியில் உள்ள குழந்தைகளை சிறந்தவராக்கும் முயற்சியில் ஆசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் சுவர் ஓவிய கலை பெரும்பங்காற்றியுள்ளதாக கூறுகிறார்.மேலும் எங்கள் பள்ளி இந்த கலையின் முக்கியத்துவத்தை தெரிவிக்கின்றன என்றும் அதிகமான மக்களிடம் இந்த கலையை கொண்டு செல்ல விரும்புவதாகவும் மோனிகா தெரிவித்தார்.

இந்த சுவர் பிரச்சாரத்தை நன்கொடையாக நான் ஏற்றுக்கொண்டது மற்றும் அதற்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டது எனது அதிர்ஷ்டம் என கருதவதாகவும் மோனிகா தெரிவித்தார்.

ஆசிய பெயிண்ட்ஸ் நிறுவனம் மற்றும் செயின்ட் + ஆர்ட் இந்தியா அறக்கட்டளை இணைந்து நடத்தி வரும் சுவர் பிரச்சாரம் எவ்வாறு கலைகளை வளர்க்கிறது என்பதற்கான பல ஊக்கமளிக்கும் எடுத்துக்காட்டுகளில் டோட் மண்டல பள்ளி ஒன்றாகும் என்று சொன்னால் அது மிகையாகாது.

சமூகங்களை ஒன்றிணைப்பதற்கும், இளைஞர்களின் மனதில் கற்பனைத் திறனை ஊக்குவிப்பதற்கும் ஒரு மேடையாக இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டின் சுவர்களை மாற்றுவதற்கான அவர்களின் எழுச்சியூட்டும் நடவடிக்கை இத்தோடு முடிவதில்லை. உங்கள் வீடுகளின் வெளிப்புற சுவர்களை பதிவு செய்வதன் மூலம் # “ டோனேட் அ வால்” பிரச்சாரத்திலும் நீங்கள் பங்கேற்கலாம் மற்றும் உங்கள் நகரத்தை அழகாக்கும் பணியிலும் நீங்கள் ஈடுபடலாம்.

உங்கள் வண்ணமயமான காட்சிக் கதை உத்வேகத்திற்கான ஒரு அளவுகோலாக இது இருக்கக்கூடும் என்று நீங்கள் நினைத்தால் பார்வையாளர்களை நீங்கள் ஆச்சரியப்படுத்தலாம்.

இதோ உங்கள் பெயர்களையும் நீங்கள் இப்போது பதிவு செய்யுங்கள் !!

•  சுவர்  "நன்கொடை  பிரச்சார மைக்ரோசைட்டுக்குள்" நுழைக.  
• இப்போது பங்கேற்பு பிரிவில் உங்கள் விவரங்களை நிரப்பவும்.
• நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பும் சுவரின் புதிய புகைப்படங்களைப் பதிவேற்றவும்.
• பிரச்சாரத்தில் பங்கேற்பது குறித்த உங்கள் கதையைப் பகிரவும்.
• submit என்ற பொத்தானை அழுத்தினால் நகரத்தை சிவப்பு வண்ணம் தீட்ட அனுமதி கிடைக்கும்

 

click me!