ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த படைப்பு : புதிய அம்சங்களுடன் 'ஆப்பிள் மேக்புக் ப்ரோ' வெளியீடு!

Asianet News Tamil  
Published : Oct 30, 2016, 01:36 AM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த படைப்பு : புதிய அம்சங்களுடன் 'ஆப்பிள் மேக்புக் ப்ரோ' வெளியீடு!

சுருக்கம்

ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்பு அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் 13 மேக்புக் ப்ரோ, மேக்புக் ப்ரோ 15 மாடல் லேப்டாப் வெளியிடப்பட்டன.

தொழில்நுட்பத்தில் புதிய புரட்சிகளை ஏற்படுத்தி தனக்கென தனி முத்திரை பதித்து இருக்கும் நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ஐ-போன், கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்டவை பொதுமக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் 25 ஆண்டுகளாக தயாரித்து வரும் மேக்புக் லேப்டாப்பின் புதிய வெர்சன் வெளியிடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டு தனது தயாரிப்பில் புதுமைகளை புகுத்திவரும் ஆப்பிள் நிறுவனம், மேக்புக் புதிய வெர்சனில் முக்கியமான ஒரு மாற்றம் செய்துள்ளது. அது என்னவென்றால் 45 ஆண்டுகளாக கணினியில் இருந்து வந்த ஃபங்ஷன் கீ இதில் நீக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பை கை விரல் ரேகை மூலம் திறந்து பயன்படுத்தும் விதத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த மேக்புக் ப்ரோ 13,15 இன்ச் அளவுகளில் சில்வர் மற்றும் கிரே நிறங்களில் உருவாகியுள்ளது. இந்த புதிய வெர்சநிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டச் திரை வசதி இல்லாதது ஏமாற்றமே.

அம்சங்கள்:-

13 மேக்புக் ப்ரோ - 8 ஜிபி ராம், முந்தைய மாடலை காட்டிலும் 17% மெலிதாகவும், 23% எடைக் குறைவாகவும் இருக்கும்.

15 மேக்புக் ப்ரோ - 16 ஜிபி ராம், முந்தைய மாடலை காட்டிலும் 67% பிரகாசமான் திரை, இரண்டு மடங்கு வேகம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!