சாப்பாட்டுக்கு கவலை வேண்டாம்...! அம்மா உணவகம் திறந்தே இருக்கும்..!

thenmozhi g   | Asianet News
Published : Mar 23, 2020, 04:12 PM IST
சாப்பாட்டுக்கு கவலை வேண்டாம்...! அம்மா உணவகம்  திறந்தே இருக்கும்..!

சுருக்கம்

பல்வேறு வேலைகளுக்காக சென்னையில் பல்வேறு விடுதிகளில் தங்கி இருப்பவர்களுக்கு எதுவாகவும், வெளியில் சிக்கி தவிப்பவர்களுக்கு வயிறார உணவளிக்க அம்மா உணவகம் இயங்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார் 

சாப்பாட்டுக்கு கவலை வேண்டாம்...! அம்மா உணவகம்  திறந்தே இருக்கும்..! 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்றும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதன் படி, நாளை காலை 6 மணி முதல் வரும் 31-ஆம் தேதி வரை அனைத்து எல்லைகளும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கும் என்பதை உறுதி செய்து உள்ளது தமிழக அரசு. அதன்படி பால், காய்கறி, கடைகள், இறைச்சி கடைகள் இயங்கும் என்றும் அவசர உதவிக்கான ஆம்புலன்ஸ் சேவை, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் என்றும், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும் என்றும் மற்றபடி அனைத்து வணிக வளாகங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

அம்மா உணவகம்

பல்வேறு வேலைகளுக்காக சென்னையில் பல்வேறு விடுதிகளில் தங்கி இருப்பவர்களுக்கு எதுவாகவும், வெளியில் சிக்கி தவிப்பவர்களுக்கு வயிறார  உணவளிக்க அம்மா உணவகம் இயங்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார் 

வீடுகள் தவிர விடுதிகளில் தங்கி இருப்பதற்கு உணவுகள் கிடைக்கும் விதத்தில் உணவகங்கள் செயல்படவும்  அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Leadership Skills: உலகையே வழிநடத்தும் 5 ரகசியங்கள்! இனி நீங்கதான் எல்லோருக்கும் Boss!
Exercises For Joint Pain : மூட்டு வலி அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி!! ஒரே வாரத்தில் நிவாரணம்; ஒரே ஒரு பயிற்சி போதும்