மின்சார துண்டிப்பு ..! ஆக்சிஜன் பற்றாக்குறை..! மருத்துவமனையில் அடுத்தடுத்து 5 பேர் உயிரிழப்பு..!

Published : May 08, 2019, 01:46 PM IST
மின்சார துண்டிப்பு ..! ஆக்சிஜன் பற்றாக்குறை..! மருத்துவமனையில் அடுத்தடுத்து 5 பேர் உயிரிழப்பு..!

சுருக்கம்

அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சிகிச்சைகள் இருந்த 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சிகிச்சைகள் இருந்த 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

நேற்று மாலை வெப்பசலனம் காரணமாக இடி மின்னலுடன் மதுரையை சுற்றி உள்ள பல பிகுதிகளில் கன மழை பெய்து உள்ளது. இதன் காரணமாக பல பகுதிகளில் மின்சார வயிர்கள் மற்றும் மின் கம்பங்கள் கீழே விழுந்து உள்ளன. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதேபோல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனை முழுவதும் மின்சாரம் இல்லாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி இருந்துள்ளனர்.

அதன்பின்னர் அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நபர்கள், ஆக்சிஜன் போதுமான அளவில் கிடைக்காத்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது

அதன் பின் அடுத்தடுத்து மூன்று நபர்களும் உயிரிழந்து உள்ளனர். அதில் மல்லிகா, ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன், பழனியம்மாள் மூவரும் அடங்குவர். இந்த மூவரும் ஏற்கனவே கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசாருக்கு விவரம் தெரிவிக்கவே உறவினர்களை சமாதானப்படுத்தி விசாரணை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் பப்பாளி சாப்பிடலாமா? 'இத' அவசியம் தெரிஞ்சுக்கோங்க
இரவில் சப்பாத்தி சாப்பிட்டால் 'இத்தனை' நன்மைகளா?