பதப்படுத்தப்படும் பாலிலும் பூச்சிக்கொல்லி மருந்துகள்...! 38% தரமற்றது...அதிர்ச்சி தகவல்..!

Published : Oct 19, 2019, 05:34 PM IST
பதப்படுத்தப்படும் பாலிலும் பூச்சிக்கொல்லி மருந்துகள்...! 38% தரமற்றது...அதிர்ச்சி தகவல்..!

சுருக்கம்

நாடு முழுவதும் 6,432 பால் மாதிரிகளை கொண்டு கொண்டு சோதனை செய்த போது, அதில் பூச்சிக்கொல்லி மருந்துகள், மாட்டுக்கு அளிக்கப்படும் தீவனங்கள் மூலமாக பாலில் ரசாயன பொருள் கலந்து உள்ளதாக தெரிவித்தார்.  

பதப்படுத்தப்படும் பாலிலும் பூச்சிக்கொல்லி மருந்துகள்...! 38% தரமற்றது.. அதிர்ச்சி தகவல்..!  

நாடு முழுவதும் 1,103 நகரங்களில் இருந்து பெறப்பட்ட 6,432 பால் மாதிரிகளை கொண்டு சோதனை செய்தது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம். 

ஆய்வின் முடிவுகளை வெளியிட்டு பேசிய ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி பவன் அகர்வால்..

நாடு முழுவதும் 6,432 பால் மாதிரிகளை கொண்டு கொண்டு சோதனை செய்த போது, அதில் பூச்சிக்கொல்லி மருந்துகள், மாட்டுக்கு அளிக்கப்படும் தீவனங்கள் மூலமாக பாலில் ரசாயன பொருள் கலந்து உள்ளதாக தெரிவித்தார். இது தவிர கொழுப்புகள்,சர்க்கரை உள்ளிட்ட மூலக்கூறுகள் அதிக அளவில் சேர்த்து  உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இதை எல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும் போது 38 சதவீத பதப்படுத்தபட்ட பால் தரமற்றதாக உள்ளது.

எனவே விதிகளின் படி பால் தயாரிப்பு இருக்க வேண்டும் என்றும் விதிகளுக்கு ஏற்ப தரமான பாலை தயாரிக்க ஜனவரி 1ம் தேதிவரை கெடு கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் பின்னரும் விதிமுறை மீறி தரமற்ற பாலை தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Star Fruit Benefits : இந்த ஸ்டார் பழத்தை பாத்தா உடனே வாங்கி சாப்பிடுங்க... கோடி நன்மைகள் கிடைக்கும்
Weight Loss Breakfast Ideas : கடினமான உடற்பயிற்சி இல்லாமலே 'எடையை' குறைக்கும் காலை உணவுகள்!