ஏன்டா கண்ணடிச்சோம்னு நெனக்கிற அளவுக்கு ராஜ்பூத்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

Published : Apr 11, 2019, 03:20 PM IST
ஏன்டா கண்ணடிச்சோம்னு நெனக்கிற அளவுக்கு ராஜ்பூத்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

சுருக்கம்

இக்கட்டான சூழலில் ஆதிக்கம் செலுத்தி ஆடிவரும் பேட்ஸ்மேனை கடுப்பாக்கும் வகையிலும் டென்சனாக்கும் வகையிலும் சில பவுலர்கள் இப்படி செய்வதுண்டு. 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி இந்த சீசனில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றிலும் மிகச்சிறந்த பரபரப்பான போட்டியாக அமைந்தது. 

காயம் காரணமாக ரோஹித் சர்மா ஆடாததால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொல்லார்டு செயல்பட்டார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி, 197 ரன்களை குவித்தது. 198 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் பொல்லார்டு தனி ஒருவனாக களத்தில் நின்று அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 83 ரன்களை குவித்து மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற செய்தார். இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 

198 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளை இழந்தாலும் மறுமுனையில் அபாரமாக ஆடினார் பொல்லார்டு. கடந்த சீசனில் ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த பொல்லார்டு, இந்த சீசனில் ஓரளவிற்கு ஆடிக்கொண்டிருந்தார். நேற்றைய போட்டியின் மூலம் மீண்டும் செம ஃபார்முக்கு திரும்பிவிட்டார். கொஞ்சம் கூட பதற்றப்படாமல் நிதானமாகவும் தெளிவாகவும் அடித்து ஆடினார். 

கடைசி 3 ஓவர்களில் 40 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஷமி வீசிய 18வது ஓவரில் வெறும் 8 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. சாம் கரன் வீசிய 19வது ஓவரில் 2 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி உட்பட 17 ரன்கள் குவித்தார் பொல்லார்டு. கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. 

மிகவும் நெருக்கடியான சூழலில் கடைசி ஓவரை வீசிய அன்கித் ராஜ்பூத், முதல் பந்தை வீச ஓடிவந்து பந்தை வீசாமல் பொல்லார்டை பார்த்து கண்ணடித்துவிட்டு சென்றார். இக்கட்டான சூழலில் ஆதிக்கம் செலுத்தி ஆடிவரும் பேட்ஸ்மேனை கடுப்பாக்கும் வகையிலும் டென்சனாக்கும் வகையிலும் சில பவுலர்கள் இப்படி செய்வதுண்டு. அதைத்தான் ராஜ்பூத்தும் செய்தார். ஆனால் அதற்கேற்றவாறு பந்தையும் நன்றாக வீசியிருக்க வேண்டும். அதைவிடுத்து முதல் பந்தை வீசாமல் ஏமாற்றிவிட்டு சென்ற ராஜ்பூத், மீண்டும் ஓடிவந்து முதல் பந்தை நோ பாலாக வீசினார். அந்த பந்தில் சிக்ஸர் அடித்தார் பொல்லார்டு. ஃப்ரீஹிட்டில் பவுண்டரி அடிக்க, முதல் பந்திலேயே 11 ரன்கள் குவிக்கப்பட்டது. அந்த நோ பாலும் மும்பை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துவிட்டது. அதன்பின்னர் பொல்லார்டை அவுட்டாக்கினாலும் பஞ்சாப்பால் வெற்றி பெற முடியவில்லை. ஏனென்றால் முதல் பந்திலேயே வெற்றியை உறுதியாக்கிவிட்டுத்தான் சென்றார் பொல்லார்டு. 

இந்நிலையில், பொல்லார்டை பார்த்து ராஜ்பூத் கண்ணடித்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் சும்மா விடுவார்களா..? பிரியா வாரியர் கண்ணடித்து பிரபலமான போட்டோவுடன் ராஜ்பூத் கண்ணடித்த போட்டோவை ஒப்பிட்டு தெறிக்கவிடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் பிரியா வாரியரின் போட்டோவை விட ராஜ்பூத் கண்ணடித்தது செம வைரலாகிவருகிறது என்றெல்லாம் பதிவிட்டு டுவிட்டரையே தெறிக்கவிடுகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூருவில் வெளுத்து வாங்கிய மழை! ஆர்சிபி டாப், கொல்கத்தா வெளியேற்றம்!
போனால் போகட்டும்! வெளிநாட்டு பிளேயர்கள் குறித்து கூலாக பதில் சொன்ன IPL நிர்வாகம்