என்ன தம்பி என்கிட்டயேவா..? நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்டா.. உன் பருப்பு என்கிட்ட வேகாது.. தல செம கெத்துதான்.. வீடியோவ பாருங்க

By karthikeyan VFirst Published Apr 4, 2019, 10:59 AM IST
Highlights

தோனிக்கு எச்சரிக்கை விடுப்பதாக நினைத்து மூக்குடைபட்டார் மும்பை இந்தியன்ஸ் வீரர் குருணல் பாண்டியா. 
 

தோனிக்கு எச்சரிக்கை விடுப்பதாக நினைத்து மூக்குடைபட்டார் மும்பை இந்தியன்ஸ் வீரர் குருணல் பாண்டியா. 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் கடும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய சம்பவம் என்றால், அது மன்கட் ரன் அவுட்டுதான். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார் அஷ்வின். 

அஷ்வின் அப்படி செய்தது கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டே அஷ்வின் செயல்பட்டதால் அதில் தவறு ஏதும் இல்லை என்று அஷ்வினுக்கு ஆதரவுக்குரல்கள் எழுந்த நிலையில், ஆட்டத்தின் ஸ்பிரிட்டை கெடுக்கும் விதமான செயல் என்ற எதிர்ப்புக்குரல்களும் வலுவாக இருந்தன.

அஷ்வின் பட்லரை அவுட் செய்தது தவறு இல்லை; எனினும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்திருக்கலாம் என்ற கருத்து பரவலாக இருந்தது. இந்நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் குருணல் பாண்டியா, மயன்க் அகர்வாலுக்கு மன்கட் ரன் அவுட் குறித்த எச்சரிக்கை விடுத்தார். அஷ்வின் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டிருந்த நிலையில், குருணலின் செயல் கவனத்தை ஈர்த்தது. 

இந்நிலையில், சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் தோனிக்கு மன்கட் எச்சரிக்கை விடுக்க முயன்று மூக்குடைபட்டார் குருணல். தோனியும் கேதர் ஜாதவும் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது, 14வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை கேதர் ஜாதவ் எதிர்கொண்டார். அந்த பந்தை வீசவந்த குருணல் வீசாமல் நிறுத்தினார். ஆனால் தோனி கிரீஸை விட்டு நகரவேயில்லை. தோனியின் பேட் கிரீஸுக்குள்ளேயே இருந்தது. தோனியின் பேட் கிரீஸுக்குள் இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பினார் குருணல். 

இதுமாதிரியான சமயோசித சம்பவங்களை செய்வதில் தோனியே கெத்து. தோனியிடமே குருணலின் பருப்பு வேகுமா? அந்த வீடியோ இதோ..  

click me!