கேகேஆரை கரைசேர்த்த கேப்டன் மோர்கன்..! ராஜஸ்தான் ராயல்ஸுக்கு கடின இலக்கு

By karthikeyan VFirst Published Nov 1, 2020, 9:36 PM IST
Highlights

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 192 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது கேகேஆர் அணி.
 

ஐபிஎல் 13வது சீசனில் பிளே ஆஃபிற்கு தகுதிபெறும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று ஆடிவருகின்றன. துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

கேகேஆர் அணியின் தொடக்க வீரர் நிதிஷ் ராணா, ஆர்ச்சர் வீசிய இன்னிங்ஸின் 2வது பந்திலேயே(ராணா எதிர்கொண்ட முதல் பந்து) கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின்னர் கில்லும் திரிபாதியும் இணைந்து பவர்ப்ளேயில் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கில் மற்றும் திரிபாதியின் அதிரடியால் பவர்ப்ளேயில் கேகேஆருக்கு 55 ரன்கள் கிடைத்தது.

ராகுல் டெவாட்டியா வீசிய 9வது ஓவரில் கில் 36 ரன்களுக்கு அவுட்டாக, அதே ஓவரிலேயே சுனில் நரைனை டக் அவுட்டாக்கினார் டெவாட்டியா. 12வது ஓவரில் ராகுல் திரிபாதியை 39 ரன்களுக்கு  ஷ்ரேயாஸ் கோபால் வீழ்த்த, அடுத்த ஓவரில் தினேஷ் கார்த்திக்கை டெவாட்டியா டக் அவுட்டாக்கினார். 

12.3 ஓவரில் 99 ரன்களுக்கு கேகேஆர் அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் களத்திற்கு வந்த ஆண்ட்ரே ரசல் 11 பந்தில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 25 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த கேப்டன் மோர்கன் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். ஸ்டோக்ஸ் வீசிய 19வது ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசிய மோர்கன், கடைசி ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸருடன் இன்னிங்ஸை முடித்தார்.

மோர்கன் 35 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 68 ரன்களை குவித்தார். மோர்கனின் அதிரடியால் 20 ஓவரில் 191 ரன்களை குவித்த கேகேஆர் அணி, 192 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. 

click me!