மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர்!! சிஎஸ்கேவை எதிர்கொள்ளும் வலுவான ரோஹித் & கோ

By karthikeyan VFirst Published Apr 3, 2019, 2:45 PM IST
Highlights

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் இதுவரை நடந்துள்ள போட்டிகளில் சிஎஸ்கே, பஞ்சாப், சன்ரைசர்ஸ், கேகேஆர் ஆகிய நான்கு அணிகளும் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 
 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் இதுவரை நடந்துள்ள போட்டிகளில் சிஎஸ்கே, பஞ்சாப், சன்ரைசர்ஸ், கேகேஆர் ஆகிய நான்கு அணிகளும் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 

3 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த சீசன் சிறந்ததாக அமையவில்லை. இந்த சீசனிலும் இதுவரை ஆடிய 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியுடன் மோதுகிறது. 

தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணி, இதுவரை ஆடிய 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரு அணிகளும் எதிரும் புதிருமான அணிகள் என்பதால் இந்த போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கடந்த சீசனில் இரு அணிகளும் தான் முதல் போட்டியிலேயே மோதின. 

இந்த சீசனில் 15வது போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஃபாஸ்ட் பவுலிங் சிக்கலாக இருந்துவந்தது. மலிங்கா அணியில் இணைந்தபிறகு அந்த அணி உத்வேகமடைந்தது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்ததால் ஆஸ்திரேலிய அணியின் இடது கை இளம் ஃபாஸ்ட் பவுலர் பெஹ்ரெண்டோர்ஃப் மும்பை அணியில் இணைந்துள்ளார். எனவே கூடுதல் உற்சாகத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 

பெக்ரெண்டோர்ஃப் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்திருப்பது அணிக்கு கூடுதல் வலுசேர்க்கும் என அணியின் தொடக்க வீரரும் விக்கெட் கீப்பருமான குயிண்டன் டி காக் தெரிவித்துள்ளார். 
 

click me!