பிரதமர் மோடிக்கான உணவு செலவை ஏற்பது யார்? பகீர் தகவலால் ஆச்சரியம்!!

Published : Aug 31, 2022, 02:21 PM ISTUpdated : Sep 01, 2022, 09:19 AM IST
பிரதமர் மோடிக்கான உணவு செலவை ஏற்பது யார்? பகீர் தகவலால் ஆச்சரியம்!!

சுருக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு பல வசதிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் நாட்டின் பிரதமருக்கு இவர்களுக்கு வழங்கும் சலுகைகள் வசதிகள் வழங்கப்படுகிறதா என்று பார்ப்போம்.

பிரதமர் மோடிக்கான வசதிகள் மற்றும் சலுகைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது.  தனது உணவுச் செலவை தானே ஏற்றுக்கொள்கிறார் என்றும், அரசு பட்ஜெட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட செலவிடப்படுவதில்லை என்றும் பிரதமர் அலுவலகத்திற்கான செயலாளர் பினோத் பிஹாரி தெரிவித்துள்ளார். 

மேலும் அவரது வீடு மற்றும் வாகனங்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு கிடைத்த பதிலில், ''பிரதமரின் இல்லம் (பிஎம் அவாஸ்) மத்திய பொதுப்பணித் துறையாலும், வாகனங்களின் பொறுப்பு சிறப்பு பாதுகாப்புப் படையாலும் பாதுகாக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பிரதமர் மோடியின் சம்பளம் குறித்த கேள்வியும் கேட்கப்பட்டு இருந்தது. இதற்கான பதிலில், விதிகளுக்கு உட்பட்டே, ஆண்டு வருமானம் அதிகரிக்கப்படுகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது. 

ncrb: இந்தியாவில் தினசரி 89 பெண்கள் பலாத்காரம்; ஒருமணிநேரத்துக்கு 49 குற்றம்: என்சிஆர்பி தகவல்

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். இதற்குப் பிறகு, மார்ச் 2, 2015 அன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ​​அவர் நாடாளுமன்ற கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள கேன்டீனுக்கு சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார்.

நாடாளுமன்றத்தில் இயங்கும் கேன்டீனில் தற்போதைய அரசு பல சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஜனவரி 19, 2021 அன்று நாடாளுமன்ற கேன்டீனில் எம்பிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்தார். 2021ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, நாடாளுமன்ற கேன்டீனுக்கு மட்டும் ரூ.17 கோடி மானியமாக செலவிடப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

அருணாச்சலப்பிரதேச எல்லையை சீன உரிமை கொண்டாடுவது அட்டூழியம்: இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் அதிர்ச்சி

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!
IndiGo: இனி எந்த விமானமும் தாமதம் இல்லை..! கண்ட்ரோல் ரூமில் நின்று கண்காணிக்கும் மத்திய அமைச்சர்