மணிப்பூரில் மட்டுமா பெண்களுக்கு எதிராக வன்முறை; இதோ மேற்குவங்கத்தில் கதறி அழுத பெண் எம்பி; ஏன்? எதற்காக?

Published : Jul 21, 2023, 04:27 PM ISTUpdated : Jul 21, 2023, 04:32 PM IST
மணிப்பூரில் மட்டுமா பெண்களுக்கு எதிராக வன்முறை; இதோ மேற்குவங்கத்தில் கதறி அழுத பெண் எம்பி; ஏன்? எதற்காக?

சுருக்கம்

மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் மேற்குவங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலை ஒட்டி நடந்த வன்முறைகள் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு எதிராக தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்குவங்க மாநிலத்தில் பாஜக எம்பி லாக்கெட் சட்டர்ஜி இன்று பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலின்போது நடந்த பயங்கரம் குறித்து பேசுகையில் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவர் கூறுகையில், 'எங்கள் மகள்கள் எந்த வெளிநாட்டிலும் வசிப்பவர்கள் இல்லை. அவர்களும் இந்நாட்டின் குடிமக்கள்.

பஞ்சாயத்து தேர்தலை ஒட்டி மாநிலத்தில் நடந்த அல்லது நடக்கும் தீவிரவாத சம்பவங்களால் மாநில பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மணிப்பூரில் நடந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சட்டம் ஒழுங்கு பலப்படுத்தப்பட வேண்டும் என்றார். பிரதமரே, எங்கள் பெண்களுக்காக ஏதாவது செய்யுங்கள். பஞ்சாயத்து தேர்தலில் பாஜக பெண் வேட்பாளர்கள் மீது வன்முறை சம்பவங்கள் நடந்தன. பஞ்சாயத்து தேர்தல் நாளில் பாஜக வேட்பாளர்களை திரிணாமூல்கட்சி தொண்டர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

” உங்களுக்கு வெட்கமே இல்லையா” மணிப்பூர் வீடியோவை கண்டித்த மம்தாவை காட்டமாக விமர்சித்த பாஜக
 
பஞ்சாயத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே மாநிலத்தில் அரசியல் பயங்கரம் தொடங்கியது. பாஜக வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. பல பாஜக வேட்பாளர்கள் தற்போது வீடு இல்லாமல் உள்ளனர்'' என்றார்.

மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தல் முடிந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினார். மணிப்பூர் எரிகிறது, இந்தியாவின் பெண்கள் எரிகிறார்கள் என்று குற்றம்சாட்டி இருந்தார். 

மணிப்பூர் வீடியோ: தீக்கிரையாக்கப்பட்ட முக்கிய குற்றவாளியின் வீடு!

''மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த சம்பவத்தை மன்னிக்க முடியாது. இந்த சம்பவம் நாட்டுக்கே அவமானம். குற்றவாளிகள் தப்பிக்க முடியாது'' என்று நேற்று நாடாளுமன்றம் துவங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக சாலையில் நடக்க வைத்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் நேற்று முதல் சமூக ஊடகங்களில் பெரிய அளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய நான்கு பேர் இதுவரை கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இதனால் ஏற்பட்ட அமளியால் திங்கள் கிழமை வரை இரண்டு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!