நடனம் ஆடிய பெண்ணை ஆசிர்வதிக்கும் வீடியோ… ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ வைரல்!!

By Narendran SFirst Published Jan 1, 2023, 5:14 PM IST
Highlights

ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் பதிவேற்றிய கோயிலில் நடனக் கலைஞருக்கு யானை ஆசி வழங்கும் வீடியோ வைரலாகி வருகிறது. 

ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் பதிவேற்றிய கோயிலில் நடனக் கலைஞருக்கு யானை ஆசி வழங்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் சுவாரசியமான பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் மாநிலத்தில் உள்ள கோவிலில் நடனமாடும் பெண்ணுக்கு யானை ஆசி வழங்கும் வீடியோவை அவர் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ எல்லா வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: 4000 கி.மீ.! உலகின் நீண்ட நீர்வழிப்பாதையைத் தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி

டிவிட்டரில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், சிறுமி கோவில் வளாகத்தில் யானையின் முன் நடனமாடுவதைக் காணலாம். பாரம்பரிய உடையில், நடனக் கலைஞர் சில அழகான பாவனைகளுடன் நடனமாடினார். அப்போது யானை தனது தும்பிக்கையை தலையில் வைத்து ஆசிர்வதிப்பதைக் காணலாம். தாரா நடனக் கலைஞர் தனது நடனத்தைத் தொடரும்போது, யானை தொடர்ந்து ஆசிர்வதித்து, தலையை ஆட்டியது.

இதையும் படிங்க: இந்திய ராணுவத்தில் 30 பெண்கள் சேர்ப்பு: 4 ஆண்டு உழைப்புக்குக் கிடைத்த வெற்றி!

கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோவிலில் எடுக்கப்பட்ட வீடியோவை ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பதிவில், 'கர்நாடகா மாநிலம் கட்டில் உள்ள ஸ்ரீ துர்காபரமேஸ்வரி கோயில் அற்புதமானது. கோயில் யானை நம் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் என்று நம்புகிறேன்' என்று தலைப்பிட்டு பதிவிட்டுள்ளார். வைரலாகும் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கலவையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

Sri Durgaaparameshwari temple , Kateel, Karnataka.
Amazing. And I would like to think the Temple Elephant is bestowing a blessing on all of us for a Happier New Year! 😊 pic.twitter.com/s2xdqV8w5D

— anand mahindra (@anandmahindra)
click me!