உத்தரகாண்ட் சுரங்க விபத்து.. 10 நாளாக சிக்கியுள்ள 41 பேர் - உள்ளே உள்ள ஊழியர்களின் உருக்கமான வீடியோ வெளியீடு!

Ansgar R |  
Published : Nov 21, 2023, 09:20 AM IST
உத்தரகாண்ட் சுரங்க விபத்து.. 10 நாளாக சிக்கியுள்ள 41 பேர் - உள்ளே உள்ள ஊழியர்களின் உருக்கமான வீடியோ வெளியீடு!

சுருக்கம்

Uttarakhand Tunnel Collapse : உத்தரகாண்ட் மாநிலத்தில் 10 நாட்களுக்கு முன்பாக சுரங்க பாதையில் ஏற்பட்ட இடுப்பாடுகளில் சிக்கி சுமார் 41 பேர் அதில் உள்ளே சிக்கினார். அவர்களை மீட்கும் பணி கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அந்த மீட்பு பனியின் ஒரு பெரிய வளர்ச்சியாக, கடந்த 10 நாட்களாக உத்தரகாண்டில் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த தொழிலாளர்களை அடைய இடைவிடாமல் பணியாற்றிய மீட்பு அதிகாரிகள் - எண்டோஸ்கோபி கேமரா மூலம் அவர்களின் புகைப்படங்களை எடுக்க முடிந்துள்ளது. தொழிலாளர்களுக்கான உணவுப் பொருட்களை அனுப்புவதற்காக நேற்று இரவு இடிபாடுகளுக்குள் தள்ளப்பட்ட ஆறு அங்குல குழாய் வழியாக எண்டோஸ்கோபி கேமரா சுரங்கப்பாதைக்குள் அனுப்பப்பட்டது.

மீட்பு அதிகாரிகள் வாக்கி டாக்கீஸ் அல்லது ரேடியோ கைபேசிகள் மூலம் சில தொழிலாளர்களிடம் பேசினர். வீடியோவில், மீட்பு அதிகாரிகள் கேமரா முன் தொழிலாளர்களை வருமாறு கூறுவதைக் காணலாம். மீட்கப்பட்டவர்களுக்கு கண்ணாடி பாட்டில்களில் கிச்சடி அனுப்பப்பட்டது. கடந்த 10 நாட்களில் அவர்களின் முதல் சூடான உணவு இதுவாகும். குழாய் வழியாக முன்னதாக, உலர் பழங்களை மட்டுமே உள்ளே அனுப்ப முடிந்தது. 

மக்களவையில் நிலுவையில் இருக்கும் 700 தனிநபர் மசோதாக்கள்!

மீட்புப் பணியின் பொறுப்பாளர் கர்னல் தீபக் பாட்டீல் கூறுகையில், தொழிலாளர்களுக்கு பைப் மூலம் மொபைல்கள் மற்றும் சார்ஜர்கள் அனுப்பப்படும். கடந்த வாரத்தில், நிலப்பரப்பு மற்றும் அப்பகுதியில் உள்ள பாறைகளின் தன்மை உட்பட பல சவால்கள் காரணமாக தொழிலாளர்களை மீட்பதற்கான பலமுறை முயற்சிகள் தோல்வியடைந்தன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி சரிந்து 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டாலும் அனைத்து தொழிலாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், திறப்புக்குள் துளையிடப்பட்ட இரும்பு குழாய்கள் மூலம் உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்னது ரசகுல்லா தீர்ந்துபோச்சா? கல்யாண வீட்டில் கலவரம்.. கைகலப்பில் 6 பேருக்கு காயம் - போலீசார் விசாரணை!

கட்டப்பட்டு வரும் இந்த சுரங்கப்பாதை, பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய இந்து புனிதத் தலங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும் தேசிய உள்கட்டமைப்பு முயற்சியான சார் தாம் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!