உத்தரப் பிரதேசம் செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக மாறியுள்ளது: முதல்வர் யோகி ஆதித்யநாத்

Published : Sep 12, 2024, 01:11 PM ISTUpdated : Sep 12, 2024, 01:40 PM IST
உத்தரப் பிரதேசம் செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக மாறியுள்ளது: முதல்வர் யோகி ஆதித்யநாத்

சுருக்கம்

நொய்டாவில் நடைபெற்ற செமிகான் இந்தியா-2024-ஐ பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து உத்திரப் பிரதேசத்தை செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்றுவதே நோக்கமாகும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். 

உத்தரப் பிரதேச அரசு ஏற்பாடு செய்துள்ள செமிகான் இந்தியா-2024 இன்று (புதன்கிழமை) தொடங்கியது. இதனை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் திறந்து வைத்தனர். மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், பிரதிநிதிகள் தொடக்க நிகழ்வில் பங்கேற்றனர். 

இந்நிகழ்ச்சியில் பேசிய உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியின் யோசனைகளுக்கு ஏற்ப, செமிகண்டக்டர் உற்பத்தி, வடிவமைப்பு சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி நடந்து வருகிறது. இந்த விஷயத்தில் விரைவில் இந்தியா உலக அளவில் முன்னணி நாடாக மாறும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று, உத்தரப் பிரதேசம், நாட்டில் மட்டுமின்றி, உலகளாவிய ரீதியிலும் நுகர்வோர் மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பலனாக, நாட்டில் மொபைல் உற்பத்தியில் 55 சதவீதமும், மொபைல் உதிரிபாக உற்பத்தியில் 50 சதவீதமும் உத்தரப் பிரதேசத்தில் நடைபெறுகிறது என்றும் யோகி கூறினார். சாம்சங் இந்தியா தனது டிஸ்ப்ளே தயாரிப்பு ஆலையை உத்தரபிரதேசத்தில் அமைக்க உள்ளதாகவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். 

உத்தரப் பிரதேசம் டேட்டா சென்டர்களின் மையமாகவும் மாறி வருகிறது என்று முதல்வர் கூறினார். செமிகண்டக்டருக்கு சாதகமான சூழலை உருவாக்க உத்தரபிரதேச செமிகண்டக்டர் பாலிசி-2024 செயல்படுத்தப்படுகிறது என்றார். இத்திட்டத்தில் மூலதன மானியம், வட்டி மானியம், நிலத்தின் விலை, முத்திரைக் கட்டணம், மின் கட்டணத்தில் மானியம் போன்ற பல கவர்ச்சிகரமான அம்சங்கள் உள்ளன என்று எடுத்துரைத்தார்.

2020ஆம் ஆண்டில் பரவிய கொரோனா தொற்றுநோய் பரவல் உள்பட பல்வேறு காரணங்களால் செமிகண்டக்டர் துறை தேசிய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார். உலகமே கொரோனாவுடன் போராடியபோது பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா கொரோனாவை திறம்பட சமாளித்தது. தன்னம்பிக்கை மிக்க இந்தியாவை உருவாக்க இது ஒரு முக்கியமான படியாகும் என்றும் யோகி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ், உத்தரபிரதேச தகவல் தொழில்நுட்பத் துறை, தரவு மையம், மின்னணு உற்பத்தி மற்றும் செமிகண்டக்டர் தயாரிப்பில் கவனம் செலுத்துகிறது என்று முதல்வர் யோகி கூறினார். உலகத் தரம் வாய்ந்த செமிகண்டக்டர் டிசைன் இன்ஜினியர்களுக்கான மையமாக உத்தரப் பிரதேசம் உருவாகி வருகிறது என்றார். மீடியாடெக், ஈஆர்எம், குவால்காம், என்ஹெச்பி, சினாப்சிஸ் கேடென்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை இங்கு நிறுவியுள்ளன. ஐடி துறை வளர்ச்சிக்காக தொழில்துறை நிலங்களை குறைந்த விலையில் வழங்க முடியும் என்றும் முதல்வர் கூறினார்.

உ.பி.யில் முதலீடு செய்வதற்கு சாதகமான சூழலை உருவாக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். இதன் விளைவாக, எளிதாக தொழில் செய்யக்கூடிய மாநிலம் என்ற சாதனையை உத்தரப்பிரதேசம் படைத்துள்ளது. பார்ச்சூன் குளோபல்-500 மற்றும் பார்ச்சூன் இந்தியா-500 ஆகியவை உ.பி.யின் எஃப்.டி.ஐ சிறப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்கின்றன என்றும் அவர் கூறினார்.

முதலீட்டாளர்களின் வசதிக்காக 'நிவேஷ் மித்ரா' என்ற ஒற்றைச் சாளர முறை மூலம் 450க்கும் மேற்பட்ட ஆன்லைன் சேவைகள் வழங்கப்படுகின்றன. இன்று மாநிலம் முழுவதும் ஊக்கத்தொகை விநியோகம் ஆன்லைனில் நடைபெறுகிறது. முதலீட்டாளர்களுக்கு உதவ 100 தொழில்முனைவோர் நண்பர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வலுவான சட்டங்கள் உள்ளிட்டவை உத்தரபிரதேசத்தின் இன்றைய சிறப்புகள் என்ற முதல்வர் யோகி, ரயில் மற்றும் சாலை பாதைகள் தவிர, வாரணாசியில் இருந்து ஹல்டியா வரை நீர்வழிப்பாதையும் உ.பி. பெற்றுள்ளது. யமுனா விரைவுச் சாலையை ஒட்டி மாநிலத்தின் முதல் மருத்துவ உபகரணங்கள் பூங்கா, திரைப்பட நகரம், பொம்மை நகரம், கைவினைப் பூங்கா ஆகியவை உருவாக்கப்பட்டு வருகின்றன என்றும் முதல்வர் சுட்டிக்காட்டினார். கிரேட்டர் நொய்டாவில் ஒருங்கிணைந்த டவுன்ஷிப், பரேலியில் மெகா ஃபுட் பார்க் மற்றும் உன்னாவில் டிரான்ஸ் கங்கா சிட்டி போன்ற திட்டங்கள் வேகமாக வளர்ந்து நடைபெற்று வருகின்றன எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
ATM வழியே ரேஷன் பொருட்கள்.. நாடு முழுவதும் அமலாகும் பலே திட்டம்..! பொதுமக்கள் குஷி