அமெரிக்காவில் அலைக்கழிக்கப்பட்ட உமர் அப்துல்லா – டுவிட்டர் பக்கத்தில் புலம்பல்

Asianet News Tamil  
Published : Oct 18, 2016, 10:49 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
அமெரிக்காவில் அலைக்கழிக்கப்பட்ட உமர் அப்துல்லா – டுவிட்டர் பக்கத்தில் புலம்பல்

சுருக்கம்

அமெரிக்க விமான நிலையத்தில் 2ம் தர குடிமகன் போல் நடத்தப்பட்டு 2 மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர்அப்துல்லா குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவின் வர்த்தக தலைநகரான நியூயார்க் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள ஒரு கருத்தரங்கில் பங்கேற்பதற்காக ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர்அப்துல்லா அமெரிக்கா சென்றார்.

நியூயார்க் நகர் விமான நிலையத்தில் அவருடைய பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை சரிபார்த்த குடியுரிமைத்துறை அதிகாரிகள், மறுபரிசீலனைக்காக சுமார் 2 மணிநேரம் அங்கு காத்திருக்க வைத்துள்ளனர்.

இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தின்மூலம் பகிர்ந்து, வேதனை தெரிவித்துள்ள உமர் அப்துல்லா, ‘3முறை அமெரிக்காவுக்கு வந்தபோதும் இதேபோல் ஆகிவிட்டது.

2 மணிநேரம் வீணாகி விட்டது. ஷாருக்கானைப்போல் போக்கிமோன் எதையும் நான் இங்கு பிடிக்கவில்லை. இதைவிட நான் வீட்டிலேயே இருந்திருக்கலாம் என்று கருதுகிறேன்’ என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

உனக்கு எங்க வீட்டு பொண்ணு கேக்குதா.. சாதி மறுப்பு திருமணம் செய்த சூரிய பிரகாஷ் ஆணவ கொலை
ஏப்ரல் 1 முதல் E20 பெட்ரோல்.. மைலேஜ் குறையுமா? ஓட்டுநர்கள் கவனத்திற்கு