வைப்ரண்ட் குஜராத் உலக உச்சிமாநாடு 2024 : ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது அல் நஹ்யான் உரை..

By Ramya sFirst Published Jan 10, 2024, 1:17 PM IST
Highlights

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று குஜராத்தின் காந்திநகரில் நடந்து வரும் வைப்ரண்ட் குஜராத் உலக உச்சி மாநாடு 2024 இல் உரையாற்றினார்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று குஜராத்தின் காந்திநகரில் நடந்து வரும் வைப்ரண்ட் குஜராத் உலக உச்சி மாநாடு 2024 இல் உரையாற்றினார். காந்திநகரில் மகாத்மா மந்திர் மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. பொதுவாக ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் பொது இடங்களில் உரையாற்ற மாட்டார்.

ஆனால், இந்தியா மீதான அவரது அன்பும், பிரதமர் மோடியின் மீது கொண்ட மரியாதையும்தான் அவரை குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டின் மேடையில் பேச வைத்துள்ளது. வைப்ரன்ட் குஜராத் உச்சிமாநாட்டில் உரையாற்றியதன் மூலம், இந்தியா மீதும் தனது சகோதரர் பிரதமர் மோடி மீதும் அவர் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்தினார்.  இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வலுவான உறவுகளை இந்த உரை குறிக்கிறது.

அவரது உரையைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, சமூக ஊடக தளமான X-ல்  ஐக்கிய அரபு எமிரேட் அதிபரை பாராட்டினார். மேலும் அவரது உரை மிகவும் ஊக்கமளிப்பதாகக் கூறினார். தனது பதிவில்  "எனது சகோதரர் ஷேக் @MohamedBinZayed @VibrantGujarat உச்சிமாநாட்டை மேற்பார்வையிட்டது மட்டுமல்லாமல், உச்சிமாநாட்டிலும் பேசினார். அவரது உரை மிகவும் ஊக்கமளிக்கிறது" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

أخي صاحب السمو الشيخ لم يشرف على قمة فحسب، بل تحدث أيضًا في القمة. وكانت تصريحاته مشجعة للغاية. وتعتز الهند بأفكاره وجهوده لتعزيز العلاقات الهندية الإماراتية. pic.twitter.com/fjHHL1b0Hn

— Narendra Modi (@narendramodi)

 

மேலும் "இந்தியா-ஐக்கிய அரபு அமீரக உறவுகளை வலுப்படுத்துவதற்கான அவரது யோசனைகள் மற்றும் முயற்சிகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது," என்று மோடி தெரிவித்துள்ளார்.

முன்னதாக செவ்வாயன்று அகமதாபாத் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானை வரவேற்ற பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரை தனது சகோதரர் இந்தியாவில் இருப்பது பெருமையாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். 

அயோத்தி ராமர் கோயில் பிரம்மாண்ட திறப்பு விழா.. முதல் தங்கக்கதவு நிறுவப்பட்டது..

தனது X  வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்த பிரதமர் "எனது சகோதரர், முகமது பின் சயீதை இந்தியாவிற்கு வரவேற்கிறோம். நீங்கள் எங்களைப் பார்ப்பது பெருமையாக உள்ளது" என்று இல் ஒரு பதிவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இரு தலைவர்களுக்கும் இடையே உள்ள அன்பான பிணைப்பை பிரதிபலிக்கும் படங்களையும் மோடி பகிர்ந்துள்ளார். விமான நிலையத்தில் இரண்டு தலைவர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பதும், ஒருவரையொருவர் கைகோர்ப்பதும் அந்த படங்களில் இடம்பெற்றுள்ளது..

பிரதமர் மோடி மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத் ஆகியோர் பின்னர் அகமதாபாத்தில் வைப்ரண்ட் குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டிற்கு முன்னதாக சாலையில் பேரணியாக சென்றனர். அகமதாபாத்தில் பிரதமர் மோடி மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிபரை ஏராளமான மக்கள் வரவேற்றனர்.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் முன்னிலையில் இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் செவ்வாய்க்கிழமை பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (எம்ஓயு) கையெழுத்திட்டன. இந்தியாவின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் UAE இன் முதலீட்டு அமைச்சகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளில் முதலீட்டு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியர்களின் தரமான பதிலடி.. “நீங்களாவது நிறைய பேரை அனுப்புங்க..” சீனாவிடம் மாலத்தீவு அதிபர் கோரிக்கை..

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலீட்டு அமைச்சகம் புதுமையான சுகாதாரத் திட்டங்களில் முதலீட்டு ஒத்துழைப்புக்கான மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியாவின் உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உணவுப் பூங்கா வளர்ச்சியில் முதலீட்டு ஒத்துழைப்பு அமைச்சகம் மற்றும் DP வேர்ல்ட் (UAE) மற்றும் குஜராத் அரசு இடையே நிலையான, பசுமை மற்றும் திறமையான துறைமுகங்களை உருவாக்குவது தொடர்பாக மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இருந்தது.

2003ஆம் ஆண்டு மோடி மாநில முதல்வராக இருந்தபோது அவரது தலைமையில் வைப்ரன்ட் குஜராத் குளோபல் உச்சி மாநாடு தொடங்கப்பட்டது. வைப்ரன்ட் குஜராத் குளோபல் உச்சிமாநாட்டின் 10-வது பதிப்பு இன்று தொடங்கி உள்ளது. இந்த மாநாடு ஜனவரி 12-ம் தேதி வரை காந்திநகரில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!