இந்தூர் கோவில் ராம நவமி விழா விபத்தில் 35 பேர் உயிரிழப்பு; 18 பெருக்கு தீவிர சிகிச்சை !

Published : Mar 30, 2023, 01:58 PM ISTUpdated : Mar 31, 2023, 07:38 AM IST
இந்தூர் கோவில் ராம நவமி விழா விபத்தில் 35 பேர் உயிரிழப்பு; 18 பெருக்கு தீவிர சிகிச்சை !

சுருக்கம்

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று ராம நவமி கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்த போது கோவிலில் உள்ள கிணற்றின் தளம் மூழ்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்து இந்தூரில் இருக்கும் சினே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ பாலேஷ்வர் கோவிலில் நடந்துள்ளது. இன்று ராம நவமி என்பதால ஏராளமானவர்கள் கோவிலுக்கு வந்திருந்து வழிபட்டனர். கோவிலுக்குள் இருந்த கிணற்றின் மீது பலரும் ஏறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, எடை தாங்காமல் கிணற்றின் உரை உள் வாங்கியது. இதில், கிணற்றின் மீது நின்று கொண்டு இருந்தவர்கள் அப்படியே கிணற்றுக்குள் விழுந்தனர். இந்த சம்பவம் இந்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

மொத்தம் 25 சிக்கி இருப்பதாக கூறப்பட்டது. உடனடியாக போலீசார் மற்றும் உள்ளூர் ஆட்கள் விரைந்து செயல்பட்டு மீட்புப் பணிகளில் இறங்கினர்.  உயிரிழந்தோர் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது. மேலும் 18 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, விரைந்து நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த விபத்துக்கு வருத்தமும் தெரிவித்து இருந்தார். 

இந்தூர் பாஜக எம்பி சங்கர் லால்வானி கூறுகையில், "விபத்து நடந்த இடத்தில் நிர்வாக குழுக்கள் உள்ளன. சிக்கியவர்களை மீட்பதே எங்களது முன்னுரிமை. கோவில் மிகவும் பழமையானது. விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்'' என்றார்.

பிரதமர் மோடியும் வருத்தம் தெரிவித்து டுவீட் பதிவு செய்து இருந்தார். அவர் தனது பதிவில், ''இந்தூரில் நடந்த விபத்தால் மிகவும் வேதனை அடைந்தேன். முதல்வர் சிவராஜ் சௌஹான் ஜியிடம் பேசி, நிலைமையை புதுப்பித்தேன். மாநில அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரித கதியில் முன்னெடுத்து வருகிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது பிரார்த்தனைகள்'' என்று தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 11 மொழிகளில் போஸ்டர்கள்! பிரதமர் மோடியை வெளுத்து வாங்கும் ஆம் ஆத்மி!

Video: பிரதமர் மோடி படத்துக்கு முத்திட்டு நன்றி தெரிவிக்கும் வயதான விவசாயி!

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!