பப்ஜி விளையாட்டல் பறிபோன 3 உயிர்: ரயில் தண்டவாளத்தில் நேர்ந்த சோகம்!!

Published : Jan 03, 2025, 01:17 PM ISTUpdated : Jan 03, 2025, 02:19 PM IST
பப்ஜி விளையாட்டல் பறிபோன 3 உயிர்: ரயில் தண்டவாளத்தில் நேர்ந்த சோகம்!!

சுருக்கம்

பிகார் மாநிலத்தில் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து PUBG விளையாடிக் கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிகார் மாநிலம் பெட்டியாவில் ரயில்வே தண்டவாளத்தில் PUBG விளையாடிக் கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். இதனால் சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மூன்று சிறுவர்களும் ஹெட்ஃபோன்கள் அணிந்து PUBG விளையாட்டில் மும்முரமாக இருந்தபோது, ரயில் வந்து இந்த விபத்து நடந்துள்ளது.

எப்படி நடந்தது இந்த விபத்து

ரயில்வே தண்டவாளத்தில் PUBG விளையாடிக் கொண்டிருந்தபோது ரயிலில் அடிபட்டு மூன்று இளைஞர்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. விளையாட்டின் போது மூன்று இளைஞர்களும் ஹெட்போன் அணிந்து கொண்டு இருந்ததால் ரயில் சத்தம் கேட்காமல் தண்டவாளத்திலேயே அமர்ந்துள்ளனர். இதனால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படகிறது. இந்த சம்பவம் முகஸ்ஸில் காவல் நிலையப் பகுதியில் உள்ள மன்சா டோலாவில் உள்ள ராயல் பள்ளி அருகே நர்கட்டியாகஞ்ச் முசாபர்பூர் ரயில் பாதையில் நடந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த இளைஞர்கள் முகஸ்ஸில் காவல் நிலையப் பகுதியில் உள்ள ரயில்வே கேட் மன்சா டோலாவைச் சேர்ந்த முகமது அலியின் மகன் ஃபுர்கான் ஆலம், பாரி டோலாவைச் சேர்ந்த முகமது டன்டனின் மகன் சமீர் ஆலம் மற்றும் மூன்றாமவர் ஹபீபுல்லா அன்சாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஹெட்ஃபோன்கள் அணிந்து PUBG விளையாடினர்

சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். டெமோ பயணிகள் ரயில் முசாபர்பூரிலிருந்து நர்கட்டியாகஞ்ச் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மூன்று இளைஞர்களும் ரயில்வே தண்டவாளத்தில் ஹெட்ஃபோன்கள் அணிந்து PUBG விளையாடிக் கொண்டிருந்தனர். PUBG விளையாடிக் கொண்டிருந்தபோது மூன்று இளைஞர்களும் ரயில் சத்தத்தைக் உணரவில்லை, மூவரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். சதர் எஸ்டிபிஓ வன் விவேக் தீப் மற்றும் ரயில்வே காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனைத்து உறவினர்களும் தங்கள் இறந்த குழந்தைகளின் உடல்களை எடுத்துச் சென்றுவிட்டனர். விபத்துத் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!
சத்தீஸ்கர் ரயில் விபத்துக்கு தகுதியற்ற ஓட்டுநர் தான் காரணம்.. விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!