விவசாயிகள் தற்கொலைக்கு என்ன நடவடிக்கை..? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

Asianet News Tamil  
Published : Mar 27, 2017, 11:52 AM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
விவசாயிகள் தற்கொலைக்கு என்ன நடவடிக்கை..? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

சுருக்கம்

supreme court questions central government about farmer suicide

ஹைட்ரோ கார்பன் திட்டம், விவசாய கடன் தள்ளுபடி செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள், கடந்த 2 வாரமாக டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், அரை நிர்வாண போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் இங்கு போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர், மரத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவர்களிடம் சமரசம் பேசி கீழே இறங்க செய்தனர்.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, விவசாயிகளின் தற்கொலையை தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்னவென்று கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், விவசாயிகளின் தற்கொலை பிரச்னை மிக முக்கியமானதாகும். தற்கொலை தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பது உள்பட பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் முன் வைத்துள்ளது.

விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து 4 வாரங்களில், விரிவான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

டிக்கெட் இல்லன்னு கவலையே வேண்டாம்.. தெற்கு ரயில்வே கொடுத்த பொங்கல் ஸ்பெஷல் கிஃப்ட்!
I-PAC ரெய்டு வழக்கில் மம்தாவுக்கு பேரிடி..! சட்டத்தின் ஆட்சிக்கு மிகப்பெரிய அவமதிப்பு .. உச்ச நீதிமன்றம் காட்டம்..!