இந்திய போர் விமானம் திடீர் மாயம் - ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பதற்றம்!!

 
Published : May 23, 2017, 02:53 PM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
இந்திய போர் விமானம் திடீர் மாயம் - ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பதற்றம்!!

சுருக்கம்

Sukhoi-30 jet with 2 on board goes missing near China border

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் பயிற்சியின் போது மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அசாம் மாநிலம் தேஜ்பூரில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய் 30 ரக போர் விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. 

தரையில் இருந்து மேல் எழும்பிய 30 ஆவது நிமிடத்தில்  ரேடார் சிக்னலில் இருந்து விமானம் திடீரென மாயமானது. 

பதற்றமடைந்த விமான கண்காணிப்பாளர்கள் விமானத்தை பல மணி நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மாயமான விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளின் நிலை குறித்து அதிகாரப்பூர்வமாக ஏதும் அறிவிக்கப்படவில்லை. 

விமானம் ரேடார் சிக்னலில் இருந்து மறைந்த பகுதியை கண்டுபிடித்த அதிகாரிகள் அங்கிருந்து போர் விமானத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!