
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா தீவிரமடைந்துவருவதால் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்த ஆலோசனைகள் நடந்துவருகின்றன.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறைந்ததாக இல்லை. தொடர்ந்து அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் இந்தியா கொரோனா தொற்றில் இன்னும் இரண்டாவது கட்டத்தில் தான் இருக்கிறது. சமூக பரவல் என்ற மூன்றாவது கட்டத்தை எட்டவில்லை.
இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தான் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்த மாநிலங்களில் தான் தினந்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சங்களை எட்டிவருகிறது. ஆரம்பத்தில் மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருந்த கேரளாவில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக பெரியளவில்லை.
இந்தியாவில் மொத்தம் 6771 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 228 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பாகவே இரட்டை சதமடித்த கேரளாவில் இப்போது பாதிப்பு எண்ணிக்கை 357ஆக உள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது.
மகாராஷ்டிரா - 1380
தமிழ்நாடு - 834
டெல்லி - 720
ராஜஸ்தான் - 520
உத்தர பிரதேசம் - 431
தெலுங்கானா - 471
மத்திய பிரதேசம் - 397
கேரளா - 357
ஜம்மு காஷ்மீர் - 188
லடாக் - 15
கர்நாடகா - 207
ஹரியானா - 169
குஜராத் - 308
ஆந்திரா - 365
பஞ்சாப் - 130
மேற்கு வங்கம் - 116
உத்தரகண்ட் - 35
ஹிமாச்சல பிரதேசம் - 28
சத்தீஸ்கர் - 19
சண்டிகர் - 18
பீகார் - 60
புதுச்சேரி - 6
கோவா- 7
அந்தமான் நிகோபார் - 11
அசாம் - 29
ஜார்கண்ட் - 14.