3 ஆம் வகுப்பு மாணவனுக்கு செருப்புமாலை: ஷூ அணியாததால் ஆசிரியர் அரங்கேற்றிய கொடூரம்

Asianet News Tamil  
Published : Oct 10, 2016, 06:58 AM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
3 ஆம் வகுப்பு மாணவனுக்கு செருப்புமாலை: ஷூ அணியாததால் ஆசிரியர் அரங்கேற்றிய கொடூரம்

சுருக்கம்

சமூக அவலங்களுக்கு பேர்போன உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் பள்ளிக்கு ஷூ அணியாமல் வந்த சிறுவனுக்கு வகுப்பு ஆசிரியர் செருப்புமாலை போட்டு கொடுமைப்படுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பள்ளிக்கு ஷூ அணியாமல் வந்த சிறுவனுக்கு செருப்பு மாலை போட்டு ஆசிரியர் ஒருவர் கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமமான பாப்சாவில் ஆரம்ப பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மூன்றாம் வகுப்பில் மாணவன் ஒருவன் படித்து வருகிறான். இவன், வகுப்புக்கு வரும்போது ஷூ அணியாமல் வந்துள்ளான்.

மாணவன் ஷூ அணியாமல் வந்ததை கண்ட வகுப்பாசிரியர் கோபமடைந்துள்ளார். சிறுவனை, ஆசிரியர் கொடுமைப்படுத்தியதாகவும் தெரிகிறது. வகுப்பு ஷூ அணியாமல் வந்ததால், சிறுவன் என்றும் பாராமல் அவனுக்கு செருப்பு மாலையும் அணிவித்துள்ளார். வகுப்பில் நடந்த இந்த செயலால், மாணவன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானான். 

பின்னர், வீட்டுக்குத் திரும்பிய மாணவன், இது குறித்து தந்தையிடம் கூறியுள்ளான். சிறுவன் கூறியதை அடுத்து, அவனின் தந்தை, அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர்

PREV
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் இரட்டிப்பாகும் ரயில்களின் எண்ணிக்கை.. அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் அறிவிப்பு..!
பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!