டிச.6 முதல் புதுவையிக் 1-8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு… அறிவித்தார் அமைச்சர் நமச்சிவாயம்!!

By Narendran SFirst Published Dec 3, 2021, 6:56 PM IST
Highlights

புதுச்சேரியில் வரும் 6 ஆம் தேதி முதல் 1 முதல் 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் வரும் 6 ஆம் தேதி முதல் 1 முதல் 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. பொதுத்தேர்வுகளும் நடைபெறாமல் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை புதுவையில் பள்ளிகள் திறக்கப்பட்டது.  1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நாளை முதல் அரைநாள் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பள்ளிகள் திறப்புக்காக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு வருகைப் பதிவேடு கிடையாது, ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் தடுப்பூசி போட்டுள்ளதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு நெறிமுறைகளை பின்பற்றி அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் கனமழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதை அடுத்து புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டது. மேலும் அண்டை மாநிலமான தமிழகத்தில் பெய்த கனமழையால் வீடூர் அணை நிரம்பி அணை திறக்கப்பட்டுள்ளது. சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல மலட்டாற்றிலும் வெள்ளம் ஓடியது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

புதுச்சேரியில் மழை விட்டு, விட்டு பெய்ததை அடுத்து பல இடங்களில் மழை நீர் தேங்கியது. இந்த தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும் மழையின் தன்மை பொருத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதுச்சேரியில் வரும் 6 ஆம் தேதி முதல் 1 முதல் 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். முன்னதாக புதுச்சேரியில் நவம்பர் 8 ஆம் தேதி முதல், ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளிகள் திறப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!