Omicron : ஒமைக்ரான் சோதனையில் முறைகேடு… ஆய்வகம் மீது விசாரணை… கர்நாடகா அமைச்சர் அதிரடி!!

By Narendran SFirst Published Dec 3, 2021, 5:57 PM IST
Highlights

கர்நாடகாவில் ஒமைக்ரான் உறுதியான இருவரில் ஒருவருக்கு முதலில் பாசிடிவ் என்றும் பிறகு நெகடிவ் என்றும் இருவேறு முடிவுகள் வந்துள்ளதை அடுத்து பரிசோதனையில் முறைகேடு நடந்திருக்கலாம் என கர்நாடக அமைச்சர் அசோகா சந்தேகம் தெரிவித்துள்ளார். மேலும் ஒமைக்ரான் பரிசோதனை செய்த ஆய்வகம் மீது விசாரணை நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 

கர்நாடகாவில் ஒமைக்ரான் உறுதியான இருவரில் ஒருவருக்கு முதலில் பாசிடிவ் என்றும் பிறகு நெகடிவ் என்றும் இருவேறு முடிவுகள் வந்துள்ளதை அடுத்து பரிசோதனையில் முறைகேடு நடந்திருக்கலாம் என கர்நாடக அமைச்சர் அசோகா சந்தேகம் தெரிவித்துள்ளார். மேலும் ஒமைக்ரான் பரிசோதனை செய்த ஆய்வகம் மீது விசாரணை நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது. இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்த இந்த ஒமைக்ரான், தற்போது தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் அச்சமடைந்த உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் இடையேயான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. மேலும் சில நாடுகள் அந்நாட்டிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கின்றன. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வருகை தரும் பயணிகள், பயணத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தென் ஆப்ரிக்காவில் பெங்களூரு வந்த 2 ஆண்களுக்கு ஒமைக்ரான் வகை கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இரண்டு பேரில் ஒருவருக்கு 66 வயது மற்றொருவருக்கு 46 வயது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் ஒமைக்ரான் உறுதியான இருவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஒமைக்ரான் உறுதியான 46 வயதான நபருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் ஒமைக்ரான் உறுதியான இருவரில் ஒருவருக்கு முதலில் பாசிடிவ் என்றும் பிறகு நெகடிவ் என்றும் இருவேறு முடிவுகள் வந்துள்ளன. இதை அடுத்து பரிசோதனையில் முறைகேடு நடந்திருக்கலாம் என கர்நாடக அமைச்சர் அசோகா சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில் பரிசோதனையில் முறைகேடு ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஒமைக்ரான் பரிசோதனை செய்த ஆய்வகம் மீது விசாரணை நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 

click me!