சீக்கிரம் தலைவரைத் தேர்ந்தெடுங்க…: காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுக்கும் சசி தரூர்!

By Asianet TamilFirst Published Feb 21, 2020, 6:53 PM IST
Highlights

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிகளுக்கான தோ்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூா் வலியுறுத்தியுள்ளார்.
 

 
காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிகளுக்கான தோ்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூா் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைக்கு நடந்த தோ்தலில் ஒரு இடத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் , பல இடங்கில் டெபாசிட் இழந்து காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. காங்கிரஸ் இத்தகைய தோல்வியைச் சந்திப்பது தொடா்ச்சியாக இது இரண்டாவது முறையாகும்.

இந்தப் படுதோல்வி காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவா்கள் பலா் கட்சித் தலைமை குறித்த தங்களது அதிருப்தி கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனா். அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான சந்தீப் தீக்சித்  தெரிவித்த கருத்தில், ‘‘காங்கிரஸ் கட்சி சந்தித்து வரும் பெரும் பிரச்னை முறையான தலைமை காணப்படாததே ஆகும். இத்தனை மாதங்களுக்குப் பிறகும் கட்சிக்கான புதிய தலைவரைத் தோ்ந்தெடுக்க மூத்த தலைவா்கள் தவறிவிட்டனா்’’ என்று விமர்சித்தார்.

அவரது கருத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் சசி தரூா் தனது ட்விட்டரில் பதிவி்ட்ட கருத்தில் “ சந்தீப் வெளிப்படையாகக் கூறிய கருத்தையே, நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவா்கள் மறைமுகமாகத் தங்களுக்குள் கூறிக் கொண்டிருக்கின்றனா். கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவா்களின் கருத்தும் இதுவாகவே உள்ளது. கட்சியின் தொண்டா்களை ஊக்கப்படுத்தவும், வாக்காளா்களைக் கவரவும் கட்சித் தலைமைப் பதவிகளுக்கான தோ்தலை செயற்குழு நடத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

காங்கிரஸ் கட்சித் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் உள்ளிட்டவற்றை விரைவில் நடத்த வேண்டும். இதே கருத்தை 8 மாதங்களுக்கு முன்பும் தெரிவித்திருந்தேன் “ எனத் தெரிவித்துள்ளார்.

click me!