சபரிமலை விவகாரம்... தீர்ப்பு இறுதியானது அல்ல... தலைமை நீதிபதி பாப்டே அதிரடி..!

By vinoth kumarFirst Published Dec 5, 2019, 6:11 PM IST
Highlights

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அனைத்து பெண்களையும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கினார். 


சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்பு இறுதியானது அல்ல என்று தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அனைத்து பெண்களையும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கினார். 

இதற்கு எதிர்த்து தெரிவித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தால் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதனையடுத்து, இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், 2018-ம் ஆண்டு அனைத்து பெண்களும் சபரிமலையில் தரிசனம் செய்யலாம் என்ற உத்தரவிற்கு எந்த தடையும் விதிக்கவில்லை.

இதனையடுத்து, சாமி தரிசனம் செய்ய 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என கேரள அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்நிலையில், சபரிமலை செல்லும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பிந்து மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவில் குறிப்பிட்ட வயதினர் இன்றி எந்த வயதுடைய பெண்கள் சபரிமலைக்கு வந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். 

இந்த வழக்கு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதியானது அல்ல என்று கூறி விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

click me!