ரூ. 8 ஆயிரம் கோடி கணக்கில் வராத வருவாய் கண்டுபிடிப்பு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Asianet News Tamil  
Published : Dec 18, 2017, 05:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
ரூ. 8 ஆயிரம் கோடி கணக்கில் வராத வருவாய் கண்டுபிடிப்பு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

சுருக்கம்

Rs. 8000 crore non profit revenue discovery in the central government information

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இந்த ஆண்டு மார்ச் மாதம்வரை ரூ. 7 ஆயிரத்து 961 கோடி கருப்புபணத்தை வருமான வரித் துறையினர் கண்டுபிடித்துள்ளனர் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் மத்திய நிதித்துறை இணைஅமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் அளித்த பதிலில் கூறியதாவது-

மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்ட வந்ததற்கு பின், கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்தஆண்டு மார்ச் மாதம் வரை, ஏறக்குறைய 900 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதில் ரூ.900 கோடிக்கு சொத்துக்கள், கணக்கில் வராத ரூ. 7 ஆயிரத்து 961 கோடி கருப்பு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவண அறிக்கையின் விவரங்கள் படி, ரூபாய்நோட்டு தடைக்குப் பின், ரூ.18.70 கோடி கள்ளநோட்டுகள் இந்த ஆண்டு நவம்பர் 30-ந்தேதி வரை போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.15.70 கோடியாக மட்டுமே இருந்தது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

இனி UPSC தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது! வெறும் 10 செகண்ட்ல செக்கிங் ஓவர்!
பராசக்தியாக மாறிய பிரதமர் மோடி.. 72 மணி நேரம்.. ஆடிப்போன சந்நியாசிகள்! சர்ப்ரைஸ் மொமண்ட்!