RRR போல் இந்திய பொருளாதாரமும் சாதனை படைக்கும்… மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து!!

Published : Apr 03, 2022, 06:14 PM ISTUpdated : Apr 03, 2022, 06:59 PM IST
RRR போல் இந்திய பொருளாதாரமும் சாதனை படைக்கும்… மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து!!

சுருக்கம்

நாட்டில் 418 பில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 32 லட்சம் கோடி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

நாட்டில் 418 பில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 32 லட்சம் கோடி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், இதுவரை இந்தியாவில் சுமார் 32 லட்சம் கோடி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது இலக்கையை விட சுமார் 5% அதிகம். மோடி அரசின் திட்டத்தின் கீழ், தொடர்ந்து ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில், பல்வேறு துறைகளுக்கான ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. முன்னர் ஏற்றுமதிகள் பொதுவாக வளரும் நாடுகளுக்கு மட்டுமே அதிகரிக்கும். இப்போது வளர்ந்த நாடுகளுக்கும் பெரிய அளவில் ஏற்றுமதிகள் நடக்கிறது. உதாரணமாக, இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணங்களுக்காக சீனாவிற்கு அதிகளவு ஏற்றுமதிகள் செய்யப்பட்டுள்ளது. நாடு தன்னம்பிக்கையை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.

ஒவ்வொரு மாதமும் 30 பில்லியன் டாலர்களுக்கு மேல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் கொரோனாவின் இரண்டு அலைகளுக்குப் பிறகு, நாடு இதை சாதித்துள்ளது. 2019-20ல் 2 லட்சம் டன்கள் அதாவது 500 கோடிக்கு கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 2020-21ல் 21.55 லட்சம் டன்கள் அதாவது சுமார் 4000 கோடிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 2021-22ல், இது 7 மில்லியன் டன்களுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, அதாவது 15,000 கோடிக்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டது என்று தெரிவித்தார். பின்னர் RRR திரைப்படம் குறித்து பேசுகையில், இது இந்திய வரலாற்றில் மிக வெற்றிகரமான படமாக இருக்கும் என்று தகவல் வருகிறது. அதே போல், இந்தியாவும் தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற்று வருகிறது.

சமீபத்தில் வெளியான RRR திரைப்படம் இந்திய வரலாற்றில் இன்று வரை உள்ள படங்களில் மிக வெற்றிகரமான படமாக இருக்கும் என்று கேள்விப்பட்டேன். 750 கோடி வசூல் செய்துள்ளது. 6 நாட்களில் உலகளவில் ரூ.672 கோடிக்கு மேல் வசூல் ஆகியுள்ளது. உண்மையில், இது ஏற்கனவே இயக்குனரின் 2015 திரைப்படமான பாகுபலியின் வாழ்நாள் வருவாயை கடந்துவிட்டது, இது இதுவரை தெற்கில் இருந்து அதிக வசூல் செய்தது. இப்படம் முதல் வாரத்திலேயே 700 கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், படத்தின் இந்தி பதிப்பும் அனைத்து சாதனைகளையும் முறியடித்து, தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில் மிகப்பெரிய படமாக மாறியது. RRR திரைப்படம் 750 கோடி வசூலித்தது போன்று இந்திய பொருளாதாரமும் புதிய இலக்கை எட்டி சாதனை படைக்கும் என்று தெரிவித்தார்.  

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bengaluru Traffic Alert: பெங்களூரு போறீங்களா? அக்டோபர் முதல் ஜனவரி வரை டிராஃபிக் இன்னும் மோசமாகும்.. காரணம் இதுதான்
Smartphone EMI : EMI கட்டலேன்னா போன் வேலை செய்யாதா? ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்ன?