மோடி இனி வேண்டாம்... ராகுல்தான் தலைவர்..! காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாஜக மூத்த தலைவர்..!

By vinoth kumarFirst Published Apr 6, 2019, 1:43 PM IST
Highlights

பிரதமர் மோடியின் மீது அதிருப்தியில் இருந்த நடிகரும் பாஜக மூத்த தலைவருமான சத்ருஹன் சின்கா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

பிரதமர் மோடியின் மீது அதிருப்தியில் இருந்த நடிகரும் பாஜக மூத்த தலைவருமான சத்ருஹன் சின்கா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

வாஜ்பாய் அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருந்தவர் நடிகர் சத்ருகன் சின்ஹா. கடந்த மக்களவைத் தேர்தலில் பீகார் மாநிலம் பாட்னா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு சின்ஹா வெற்றி பெற்றார். அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி சின்ஹாவுக்கு அமைச்சர் பதவியை வழங்கவில்லை. அப்போது முதலே பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருந்தார் சத்ருகன் சின்ஹா. பல்வேறு சந்தர்ப்பங்களில் மோடியையும் அமித்ஷாவையும் சின்ஹா விமர்சித்துவந்தார். இதன் காரணமாக பாஜக மேலிடம் அவரை ஓரங்கட்டியது.

 

இந்நிலையில் பீகாரில் நிதிஷ் குமார் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் பாஜக, வேட்பாளர் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. சத்ருகன் சின்ஹா வழக்கமாகப் போட்டியிடும் பாட்னா தொகுதியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு பாஜக மேலிடம் சீட்டு வழங்கியது. இதனை தொடர்ந்து  'மோடியின் தலைமையின் கீழ் இனி இருக்க முடியாது' என்று மறைமுகமாக கருத்து தெரிவித்திருந்தார் சின்ஹா.

 

பின்னர் பிரதமர் மோடியை சமீப காலமாக கடுமையாக விமர்சித்து வந்தார். பிரதமர் மோடி குறித்து பதிவிட்டுள்ள ஒரு டிவீட்டில் அவருக்கு ஒரு புதிய அடைமொழியை கொடுத்தார். அவுட் கோயிங் சார் ஜி என்று ஆரம்பித்து மோடியை விமர்சித்து சத்ருகன் சின்ஹா டிவீட் செய்தார்.  

மேலும் சுயேட்சையாக பாட்னாவில் களமிறங்க யோசித்துவந்த சின்ஹா, தற்போது பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அவர் ரவிசங்கர் பிரசாத்தை எதிர்த்து சாகிப் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என தெரிகிறது.

click me!