மோடி, ராகுல் திடீர் சந்திப்பு – நடந்தது என்ன…?

First Published Dec 16, 2016, 11:50 AM IST
Highlights


பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று காலை சந்தித்து பேசினார்.

நாடாளுமன்றத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை, நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் சந்தித்துப் பேசினார். ரூபாய் நோட்டு மதிப்பு இழப்பு விவகாரம் குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பிரதமரின் தனிப்பட்ட ஊழல் பற்றி தனக்கு தெரியும் எனவும், அதற்கான ஆதாரங்களை வெளியிடப் போவதாகவும் ராகுல் அறிவித்தார். மேலும், ரூபாய் நோட்டு விவகாரத்தில் ராகுல், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!