பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்: சிங்கப்பூரின் 3 செயற்கைக்கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று விண்ணுக்கு ஏவப்படுகிறது

Published : Jun 30, 2022, 01:39 PM ISTUpdated : Jun 30, 2022, 02:48 PM IST
பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்: சிங்கப்பூரின் 3 செயற்கைக்கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று விண்ணுக்கு ஏவப்படுகிறது

சுருக்கம்

பிஎஸ்எல்வி C 53: சிங்கப்பூரின் டீஎஸ்-இஒ உள்ளிட்ட 3 மூன்று செயற்கைக் கோள்களை ஏந்தி PSLV C-523 ராக்கெட் இன்று  விண்ணை நோக்கி பாய்வதற்கு தயாராக உள்ளது. இதற்கான கவுன்ட் டவுன் நேற்று மாலை 5 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் துவங்கியது. 

சிங்கப்பூரின் டீஎஸ்-இஒ உள்ளிட்ட 3 மூன்று செயற்கைக் கோள்களை ஏந்தி PSLV C-523 ராக்கெட் இன்று  விண்ணை நோக்கி பாய்வதற்கு தயாராக உள்ளது. இதற்கான கவுன்ட் டவுன் நேற்று மாலை 5 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் துவங்கியது. 

சதீஷ் தவானின் இரண்டாவது ஏவுதள மையத்தில் இருந்து இந்த செயற்கை கோள்கள் இன்று (ஜூன் 30ஆம் தேதி) மாலை 6 மணிக்கு ஏவப்படுகிறது. இதற்கான பணிகளில் நேற்று இஸ்ரோ ஈடுபட்டு இருந்தது. 

பொதுவாக வெளிநாட்டு செயற்கை கோள்களையும் வணிக ரீதியாக விண்ணுக்கு அனுப்பும் பணியை இஸ்ரோ செய்து வருகிறது. இந்த வகையில், சிங்கப்பூருக்குச் சொந்தமான டிஎஸ்-இஒ, நியூசர், ஸ்கூப் -1 ஆகிய 3 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாது ஏவுதளத்தில் இருந்து இன்று ஏவப்படுகிறது. 

இந்த மூன்று செயற்கைக் கோள்களில் டிஎஸ்-இஒ, நியூசர் ஆகிய இரண்டு செயற்கைக் கோள்களும் 155 கிலோ எடை கொண்டவை. ஸ்கூப் -1 செயற்கைக் கோள் 2.8 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக் கோள்கள் நிலத்தின் வண்ண புகைப்படங்கள், பருவநிலை தொடர்பான புகைப்படங்களை தெளிவாக எடுத்து அனுப்பும்.

இந்த மூன்று செயற்கை கோள்களில் ஸ்கூப் 1 மிகவும் சிறியது. சிங்கப்பூரின் என்டியு எலக்டிரிகல் அண்டு எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் மாணவர்கள் இந்த சிறிய செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர். 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!