மசாஜ் சென்டரில் உல்லாசம்.. விசாகப்பட்டினம் போலீஸ் டெய்டில் 3 பேர் கைது!

Published : Nov 06, 2025, 07:47 PM IST
Visakhapatnam Spa

சுருக்கம்

விசாகப்பட்டினத்தில் 'மசாஜ் சென்டர்' என்ற பெயரில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடத்திய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சோதனையில் இரண்டு நிர்வாகிகள், ஒரு வாடிக்கையாளர் பிடிபட்டனர் மற்றும் ஒன்பது பெண்கள் மீட்கப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அதிரடிப்படை போலீசார் நடத்திய சோதனையில், ‘மஜாஜ் சென்டர்’ என்ற பெயரில் சட்டவிரோதமாகப் பாலியல் தொழில் நடத்தி வந்தவர்களை கைது செய்துள்ளனர். இரண்டு நிர்வாகிகள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர்.

விஐபி சாலைக்கு அருகில் உள்ள 'ஆர்கிட் வெல்னஸ் & ஸ்பா சென்டர்' (Orchid Wellness & Spa Centre) என்ற நிறுவனத்தில் அரசாங்க விதிகளை மீறி சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, நவம்பர் 4ஆம் தேதி மாலை சுமார் 6:30 மணியளவில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

வாட்ஸ்அப் மூலம் தொடர்பு

சோதனைக்காக உள்ளே நுழைந்தபோது அங்கிருந்து தப்ப முயன்ற இரண்டு நபர்களைக் காவல்துறையினர் பிடித்தனர். அவர்கள் அந்த மையத்தின் நிர்வாகிகளான கல்லூரு பவன் குமார் (36) மற்றும் ஜனா ஸ்ரீனிவாஸ் (35) என அடையாளம் காணப்பட்டனர்.

கசிரெட்டி அருண் குமார் மற்றும் ராகுல் ஆகியோரின் பெயரில் ஸ்பா உரிமம் பெற்று, வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக இருவரும் ஒப்புக்கொண்டனர். ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் சுமார் ரூ. 3,000 வசூலித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆதாரங்கள் பறிமுதல்

அறைகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது, சீலி ராமச்சந்திர பிரசாத் (43) என்ற வாடிக்கையாளர் ஒரு பெண் ஊழியருடன் காணப்பட்டார். மேலும், அங்கு சிக்கியிருந்த ஒன்பது பெண்களையும் மீட்டுள்ளனர். அவர்கள் இப்போது காவல்துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

சோதனை நடந்த இடத்திலிருந்து ரூ. 7,000 ரொக்கம், மூன்று மொபைல் போன்கள் (ஒரு ஐபோன் 13, ஒரு நத்திங் ஃபோன், மற்றும் ஒரு சாம்சங் ஃபோன்) உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

உரிமையாளர்களைத் தேடி வலை வீச்சு

சம்பவம் தொடர்பாக, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டவிரோத பாலியல் தொழிலில் முக்கியப் பங்கு வகித்த ஸ்பா உரிமையாளர்களான கசிரெட்டி அருண் குமார் மற்றும் ராகுல் ஆகியோர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களைத் பிடிப்பதற்காகப் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு நிர்வாகிகளும் வாடிக்கையாளரும் தற்போது விசாரணை வளையத்தில் உள்ளனர். இவர்களின் பின்னணியில் உள்ள அனைவரையும் கண்டுபிடிக்க விசாகப்பட்டினம் நகரக் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!