சக்திவாய்ந்த அக்னி-1 சோதனை வெற்றி

Asianet News Tamil  
Published : Nov 22, 2016, 04:50 PM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
சக்திவாய்ந்த அக்னி-1 சோதனை வெற்றி

சுருக்கம்

அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லக் கூடிய, அதிக திறன் கொண்ட, அக்னி-I ஏவுகணை சோதனை, வெற்றி அடைந்துள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நவீன ஏவுகணையான அக்னி-I,  தரையில் இருந்து 350 கி.மீ.,தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறனுடையது என்றும், 500 முதல் 1,000 கிலோ வரை எடையுள்ள ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டது என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒடிசா ஏவுதளத்தில் இன்று செலுத்தப்பட்ட அக்னி-I ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நேற்று இதே ஒடிசா ஏவுதளத்தில் இருந்து, இந்தியாவின் மற்றொரு சக்தி வாய்ந்த ஏவுகணையான பிரித்வி-2 சோதனை வெற்றிகரமாக நடந்தது குறிப்பிடத்தக்கது

PREV
click me!

Recommended Stories

நாட்டின் முதல் வந்தேபாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ஆன்லைனில் வாக்கி-டாக்கி விற்பனை.. பிளிப்கார்ட், மீஷோ உள்ளிட்ட 8 நிறுவனங்களுக்கு விழுந்த அடி!