பிரதமர் மோடி தலைமையில் இன்று மெய்நிகர் ஜி20 உச்சி மாநாடு!

Published : Nov 22, 2023, 10:36 AM IST
பிரதமர் மோடி தலைமையில் இன்று மெய்நிகர் ஜி20 உச்சி மாநாடு!

சுருக்கம்

பிரதமர் மோடி தலைமையில் மெய்நிகர் ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா இன்று நடத்துகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை மெய்நிகர் ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது. உச்சிமாநாட்டில் அனைத்து G20 உறுப்பினர்கள், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவர், ஒன்பது விருந்தினர் நாடுகள் மற்றும் 11 சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்தியாவின் ஜி20 தலைமை நவம்பர் 22ஆம் தேதியுடன் (இன்று) முடிவடைகிறது. அதற்குள் மற்றொரு உச்சிமாநாட்டை இந்தியா நடத்தும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, இந்த மெய்நிகர் உச்சி மாநாடு இன்று மாலை நடைபெறவுள்ளது.

இந்தியா நடத்தும் இந்த மெய்நிகர் ஜி 20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கலந்து கொள்வார் என்று அந்நாட்டு அதிபர் மாளிகை அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் விளாடிமர் புடின் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதில், அவரது பிரதிநிதியாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்றார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ரூ.751.9 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

இந்தியாவின் G20 தலைமையின் குறிப்பிடத்தக்க சில சாதனைகள்:


** 2030 ஆம் ஆண்டளவில் உலகளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை மூன்று மடங்காக உயர்த்துவது. 2030 ஆம் ஆண்டளவில் ஆற்றல் திறன் மேம்பாட்டின் உலகளாவிய விகிதத்தை இரட்டிப்பாக்க ஜி20 ஒருமித்த கருத்து. இவை COP28 இன் முக்கிய எதிர்பார்க்கப்படும் விளைவுகளாகும்.

** நவம்பர் 14ஆம் தேதி அமெரிக்கா-சீனா கூட்டு அறிக்கையானது G20 தலைவர்களை ஆதரித்தது.

** புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்த பிரகடனம் மற்றும் தலா ஐந்து பெரிய CCUS திட்டங்களை மேற்கொள்ள ஒப்புக்கொண்டது. CCUS என்பது கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பகத்தைக் குறிக்கிறது. இது மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தொழில்துறை தளங்கள் போன்ற பெரிய மூலங்களிலிருந்து CO2 உமிழ்வைக் குறைக்கும் தொழில்நுட்பமாகும்.

** டிஜிட்டல் ஹெல்த் பற்றிய உலகளாவிய முன்முயற்சி (GIDH), இது இந்தியாவின் வாதத்தின் விளைவாக 44.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உறுதிமொழியைப் பெற்றது.

** இந்த ஆண்டு அக்டோபரில் G20 நிதி அமைச்சர்களுக்கு MDB களை வலுப்படுத்துவதற்கான சுயாதீன நிபுணர் குழுவின் அறிக்கையின் தொகுதி 2 ஐ சமர்ப்பித்தல் மற்றும் ஏற்றுக்கொள்வது. என்பன உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மெய்நிகர் ஜி20 உச்சி மாநாடு பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் என்றும், டெல்லி ஜி20 உச்சி மாநாட்டிற்குப் பிறகு நடைபெறும் இந்த மாநாட்டில், முக்கியப் பிரச்சினைகளுக்கான முடிவுகள் மற்றும் முன்னேற்றங்கள் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் ஜி20 ஷெர்பா அமிதாப் காந்த் கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!
சத்தீஸ்கர் ரயில் விபத்துக்கு தகுதியற்ற ஓட்டுநர் தான் காரணம்.. விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!