தீபாவளி கொண்டாட்டம்! ஜனாதிபதியை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!

Published : Oct 20, 2025, 07:22 PM IST
Modi meets Murmu

சுருக்கம்

இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிகாலை முதலே மக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை, இன்று (அக்டோபர் 20) நாடு முழுவதும் உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இருள் நீங்கி ஒளி பிறக்கும் இந்த நன்னாளில் மக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகளைப் பரிமாறி, மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

தமிழகத்தில் களைகட்டிய கொண்டாட்டம்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே தீபாவளி களைகட்டி வருகிறது. பெரும்பாலான மக்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, வீடுகளில் பூஜைகள் செய்து, புத்தாடை அணிந்து குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். பலர் அருகில் உள்ள கோவில்களுக்குச் சென்றும் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் எனப் பலரும் நாட்டு மக்களுக்குத் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

ஜனாதிபதியைச் சந்தித்த பிரதமர் மோடி

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்குத் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை இன்று நேரில் சந்தித்த பிரதமர் மோடி, அவருக்குத் தனது தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். இந்த சந்திப்பு நாட்டின் முக்கியத் தலைவர்களுக்கு இடையேயான நல் உறவை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியா-ரஷ்யா நட்பு ஒரு துருவ நட்சத்திரம்! புடினை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!
மன்னிப்பு கோரிய இண்டிகோ நிறுவனம்.. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு சிறப்பு வசதிகள் அறிவிப்பு!