இதை கண்டிப்பா பண்ணுங்க.. தீபாவளி வாழ்த்து சொன்ன கையோடு பிரதமர் மோடி கொடுத்த அட்வைஸ்

Published : Oct 20, 2025, 07:52 AM IST
PM Modi

சுருக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், உள்நாட்டுப் பொருட்களை வாங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். “ஒளியின் திருநாள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தை கொண்டு வரட்டும்” என்று அவர் கூறினார்.

உள்நாட்டு பொருட்களை ஆதரிக்க வேண்டுகோள்

தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் மோடி, நாட்டு மக்களை உள்நாட்டு பொருட்களை வாங்குமாறு கேட்டுக் கொண்டார். “இந்த பண்டிகை காலத்தில் இந்திய உழைப்பு, படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை நாம் கொண்டாடுவோம்” என சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.

புகைப்படங்கள் பகிரவும்

மக்கள் பெருமையுடன் தங்கள் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து, சுதேசிப் பொருட்களை ஆதரிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். “வாருங்கள், இந்தியப் பொருட்களை வாங்குவோம், அதை பெருமையுடன் சொல்லுங்கள். நீங்கள் வாங்கியதை சமூக ஊடகங்களில் பகிருங்கள். ஊக்கம் அளிக்கும்” என்று அவர் எழுதியுள்ளார்.

ஜிஎஸ்டி விகிதங்கள் குறைப்பு

மத்திய அரசு செப்டம்பர் 22 முதல் ஜிஎஸ்டி விகிதங்களை குறைத்தது. நவராத்திரி மற்றும் தீபாவளி விழாக்களில் மக்கள் விலைச் சலுகை பெற்றுக்கொள்ளும் வகையில் இதை செயல்படுத்தியதாக அரசு தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி சேமிப்பு விழா

இந்த குறைப்பைப் பற்றி அரசு “ஜிஎஸ்டி சேமிப்பு விழா” என பெயரிட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் மக்களின் தேவைகள் மற்றும் பொருளாதார சலுகைகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

EPFO சம்பள வரம்பு உயர்வால் கைக்கு வரும் சம்பளம் குறையுமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!
Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!