மன் கி பாத்: ஜவுளி கழிவில் இந்தியாவின் நிலை குறித்து பிரதமர் மோடி கவலை!

Published : Mar 30, 2025, 03:05 PM IST
மன் கி பாத்: ஜவுளி கழிவில் இந்தியாவின் நிலை குறித்து பிரதமர் மோடி கவலை!

சுருக்கம்

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஜவுளி கழிவுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். துணிகளை மறுசுழற்சி செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜவுளி கழிவுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

Mann Ki Baat: பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ நிகழ்ச்சி மன் கி பாத் மூலம் நாட்டு மக்களுடன் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அதிகரித்து வரும் ஜவுளி கழிவுகள் குறித்து அவர் கவலை தெரிவித்தார். துணிகளை மறுசுழற்சி செய்யுமாறு பிரதமர் மக்களை கேட்டுக்கொண்டார்.

மன் கி பாத் நிகழ்ச்சி

நரேந்திர மோடி கூறுகையில், "நம் அனைவரையும் நேரடியாக தொடர்புபடுத்தும் ஒரு சவாலைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். இந்த சவால் 'ஜவுளி கழிவு'. இந்த ஜவுளி கழிவு என்ன புதுசா இருக்குன்னு நீங்க நினைக்கலாம்? உண்மையில், ஜவுளி கழிவு உலகம் முழுவதற்கும் ஒரு பெரிய கவலையாக உள்ளது.

பழைய துணிகளை அகற்றிவிட்டு புதிய துணிகளை வாங்கும் போக்கு

பிரதமர் கூறுகையில், “இன்று உலகம் முழுவதும் பழைய துணிகளை கூடிய விரைவில் அகற்றிவிட்டு புதிய துணிகளை வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. நீங்கள் அணியாமல் விட்டுவிடும் பழைய துணிகளுக்கு என்ன நடக்கும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அவை ஜவுளி கழிவுகளாக மாறுகின்றன. இது குறித்து பல உலகளாவிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஒரு ஆய்வில் 1% க்கும் குறைவான ஜவுளி கழிவுகள் புதிய துணிகளாக மாற்றப்படுகின்றன என்பது தெரியவந்துள்ளது.”

ஜவுளி கழிவுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது

பிரதமர் மோடி கூறுகையில், "அதிக ஜவுளி கழிவுகளை வெளியேற்றும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த சவாலை சமாளிக்க நம் நாட்டில் பல பாராட்டத்தக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பல இந்திய ஸ்டார்ட்-அப்கள் ஜவுளி மீட்பு வசதியில் வேலை செய்யத் தொடங்கியுள்ளன. பல இளைஞர்கள் நிலையான ஃபேஷன் முயற்சியுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் பழைய துணிகள் மற்றும் காலணிகளை மறுசுழற்சி செய்து ஏழைகளுக்கு கொண்டு சேர்க்கிறார்கள். ஜவுளி கழிவுகளில் இருந்து அலங்கார பொருட்கள், கைப்பைகள், எழுதுபொருட்கள் மற்றும் பொம்மைகள் போன்ற பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பல நிறுவனங்கள் இப்போது வட்ட ஃபேஷன் பிராண்டை பிரபலப்படுத்த வேலை செய்கின்றன."

பிரதமர் மோடி கவலை

அவர் மேலும் கூறுகையில், "ஜவுளி கழிவுகளை சமாளிக்க சில நகரங்கள் தங்களது புதிய அடையாளத்தை உருவாக்கி வருகின்றன. ஹரியானாவின் பானிபட் ஜவுளி மறுசுழற்சிக்கான உலகளாவிய மையமாக உருவெடுத்து வருகிறது. பெங்களூருவும் புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறது. இங்கு பாதிக்கும் மேற்பட்ட ஜவுளி கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இது மற்ற நகரங்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு." என்று கூறியுள்ளார்.

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் - ஆர்பிஐ அதிரடி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.150 கோடியில் அம்பானி வாங்கிய ஆகாச அரக்கன்..! Rolls-Royce of skies.. இவ்வளவு வசதி இருக்கா..?
கணவனை கழற்றிவிட்டு ஏசி மெக்கானிக்கவுடன் சென்ற 25 வயது பெண்.. 8 மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!