நியூஜெர்சி அக்ஷர்தாம் கோவில் திறப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து; சிறப்புக்கள் என்னென்ன?

By Dhanalakshmi GFirst Published Oct 2, 2023, 11:14 AM IST
Highlights

நியூஜெர்சியில் சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோவில் அக்டோபர் 8ஆம் தேதி மகந்த் சுவாமி மகராஜ் வழிகாட்டுதலின்படி திறந்து வைக்கப்படுகிறது. இதையடுத்து அக்டோபர் 18ஆம் தேதி முதல் பக்தர்கள் வழிபாடுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோவில் நவீன காலத்தில் இந்தியாவிற்கு வெளியே கையால் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இந்து கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. இது அக்டோபர் 8 ஆம் தேதி நியூ ஜெர்சியில் திறக்கப்பட உள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நியூஜெர்சியில் ராபின்ஸ்வில்லே என்ற இடத்தில் அமெரிக்காவில் இருந்து 12,500 தன்னார்வலர்களால் 12 ஆண்டுகளாக அதாவது 2011 முதல் 2023 ஆம் ஆண்டு வரை கட்டப்பட்டு வந்துள்ளது. கம்போடியாவில் அமைந்திருக்கும் அங்கோர் வாட் கோவிலுக்குப் பின்னர் உலகின் இரண்டாவது மிகப்பெரிய கோவிலாக அக்ஷர்தாம் கோவில் கருதப்படுகிறது. 

வரும் அக்டோபர் 8ஆம் தேதி இந்தக் கோவில் மகந்த் சுவாமி மகாராஜ் வழிகாட்டுதலின்படி திறந்து வைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது. கோவில் திறந்த பின்னர் அக்டோபர் 18ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவில் திறக்கப்படுவதற்கு முன்பே பலரும் இந்தக் கோவிலுக்கு வருகை புரிந்துள்ளனர்.  

மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய குட்நியூஸ்.. இனி சம்பள உயர்வுக்கு 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டாம்..

இந்தியாவில் முதன் முதலாக குஜராத்தின் காந்திநகரில் 1992ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து டெல்லியில் 2005ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. இந்து கலை, கலாச்சாரம், பண்பாட்டை ஒட்டி இந்தக் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. 

கோவிலின் சிறப்புக்கள் என்ன?

1. அக்ஷர்தாம் கோவில் 255 அடி x 345 அடி x 191 அடி என்ற அளவில் 183 ஏக்கருக்கு மேல் பரவியுள்ளது. இதற்கிடையில், 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அங்கோர் வாட் கோயில் வளாகம், உலகின் மிகப்பெரிய இந்துக் கோயிலாகும். இது 500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து தற்போது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக உள்ளது.

2. இது பண்டைய இந்து வேதங்களின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. 10,000 சிலைகள், இந்திய இசைக்கருவிகள் மற்றும் நடன வடிவங்களின் செதுக்கல்கள் உட்பட பண்டைய இந்திய கலாச்சாரத்தின் வடிவமைப்பு கூறுகளை உள்ளடக்கியுள்ளது. 

காந்தி ஜெயந்தி..! மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை

3. தனித்துவமான இந்துக் கோவில் வடிவமைப்பில் ஒரு முக்கிய கோவில். 12 துணைக் கோவில்கள், ஒன்பது கோபுரம் போன்ற கட்டமைப்புகள் மற்றும் ஒன்பது பிரமிடுகளை கொண்டுள்ளது. 

4. அக்ஷர்தாமில் இதுவரை கட்டப்பட்ட பாரம்பரிய கல் கட்டிடக்கலையின் மிகப்பெரிய நீள்வட்ட குவிமாடம் உள்ளது. இது ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

5. அக்ஷர்தாமில், ஒவ்வொரு கல்லுக்கும் ஒரு சிறப்பு உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு வகையான கற்களில் சுண்ணாம்பு, இளஞ்சிவப்பு மணற்கல், பளிங்கு மற்றும் கிரானைட் ஆகியவை அடங்கும். அவை கடுமையான வெப்பத்தையும் குளிரையும் தாங்கும்.

6. கட்டுமானத்தில் ஏறக்குறைய இரண்டு மில்லியன் கன அடி கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பல்கேரியா மற்றும் துருக்கியில் இருந்து சுண்ணாம்புக்கல் உட்பட உலகின் பல்வேறு தளங்களில் இருந்து பெறப்பட்டது. கிரீஸ், துருக்கி மற்றும் இத்தாலியில் இருந்து பளிங்கு, இந்தியா மற்றும் சீனாவில் இருந்து கிரானைட், இந்தியாவில் இருந்து மணற்கல் மற்றும் ஐரோப்பா, ஆசியா, லத்தீன் அமெரிக்காவிலிருந்து பிற அலங்கார கற்கள் பெறப்பட்டு கட்டப்பட்டுள்ளது.

7. இந்தக் கோவிலில் பாரம்பரிய இந்திய படிக்கட்டுக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் புனித நதிகள் மற்றும் அமெரிக்காவின் 50 மாநிலங்கள் உட்பட, உலகம் முழுவதிலுமிருந்து 300 க்கும் மேற்பட்ட நீர்நிலைகளிலிருந்து நீரை இந்தக் கிணறு கொண்டுள்ளது.

நியூஜெர்சியில் உள்ள ராபின்ஸ்வில்லேவில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கான தனது கடிதத்தில் பிரதமர் மோடி, ''கோயில்கள் பல நூற்றாண்டுகளாக சேவை மற்றும் சமூக-கலாச்சார நடவடிக்கைகளின் மையமாக இருந்து வருகின்றன. அவை பக்தி மையங்கள் மட்டுமல்ல, கலை, கட்டிடக்கலை ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கான தளங்களாகவும் செயல்படுகின்றன. இத்தகைய ஆழமான கலாச்சாரக் கோட்பாடுகள் மனிதகுலத்தை வழிநடத்தி வருகின்றன.

தலைமுறைகளாக அக்ஷர்தாம் கோவில் தொடக்க கொண்டாட்டங்கள் இந்தியாவின் கட்டிடக்கலை, புகழ்பெற்ற பண்டைய கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்தப் பணியில் ஈடுபட்டு இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா வந்திருந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவியுடன் டெல்லியில் இருக்கும் அக்ஷர்தாம் கோவிலுக்கு சென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரும், நியூஜெர்சியில் திறக்கப்படவிருக்கும் அக்ஷர்தாம் கோவிலுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

click me!