இன்று முதல் நாள் தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் - புதிய நடைமுறை அமலுக்கு வந்தது

 
Published : Jun 16, 2017, 05:16 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
இன்று முதல் நாள் தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் - புதிய நடைமுறை அமலுக்கு வந்தது

சுருக்கம்

Petrol diesel prices daily revision to be implemented in whole country

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையைப் பொறுத்து இந்தியாவில் ஒவ்வொரு 15 நாள்களுக்கும் பெட்ரேல் டீசலின் விலை மாற்றியமைக்கப்பட்டு வந்தது.

ஆனால் இந்நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் விதமாக முதல் கட்டமாக சண்டிகர், ஜாம்ஷெட்பூர், உதய்பூர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் பெட்ரோல் டீசல் விலை நாள்தோறும் சோதனை அடிப்படையில் கடந்த மே 1 ஆம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று முதல் நாடு முழுவதும் நாள்தோறும் பெட்ரோல் டீசலின் விலை மாற்றியமைக்கப்படவுள்ளது. காலை 6 மணிக்கு விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளது.

இதற்கிடையே இரு முறை கட்டணம் நிர்ணயிக்கப்படும் முறையின் படி நேற்றிரவு நள்ளிரவு பெட்ரோல் டீசலின் விலையில் மாற்றம் செய்யப்பட்டன.

அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.12 காசுகளும், டீசல் 1.24 காசுகளும் குறைக்கப்பட்டன. இந்த விலை மாற்றம் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது.

PREV
click me!

Recommended Stories

இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!
பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!